fbpx

தமிழக அமைச்சரை ஒருமையில் பேசிய இளைஞர்கள்..!! தட்டி தூக்கிய காவல்துறை..!!

தமிழக கைத்தறித்துறை அமைச்சர் காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒருமையில் பேசியதாக 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும், கைத்தறித்துறை அமைச்சருமான காந்தி கடந்த 21ஆம் தேதி சென்னை சென்று விட்டு ராணிப்பேட்டைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, காவேரிப்பாக்கம் அருகே வந்தபோது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில், சென்னையை 2 இளைஞர்கள், ராணிப்பேட்டையை சேர்ந்த சாமுவேல் என்பவர் தங்களது வங்கியில் இருந்து கடன் பெற்றுள்ளதாகவும் அந்த கடனை நீங்கள் தான் பெற்றுத்தர வேண்டும் என கூறியுள்ளனர். மேலும், அமைச்சர் காந்தியை இருவரும் ஒருமையில் வசைப்பாடியுள்ளனர்.

இது தொடர்பாக அமைச்சரின் உதவியாளர் ராஜசேகர் கடந்த 21ஆம் தேதி காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், அமைச்சர் காந்தியை ஒருமையில் பேசிய இரண்டு இளைஞர்களும் சென்னை திருவொற்றியூரை சேர்ந்த கோகுல் (25) என்பதும் மற்றோரு இளைஞர் கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த பாலாஜி (31) என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, இருவரையும் அதிரடியாக கைது செய்த காவல்துறையினர், வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Chella

Next Post

ஒரு கொத்து திராட்சை ரூ.9 லட்சமா..? அப்படி அதுல என்னதான் இருக்கு..? சுவாரஸ்ய தகவல்..!!

Tue Jan 24 , 2023
ஒரு கொத்து திராட்சையின் விலை ரூ.9 லட்சம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆம் உண்மைதான்.. அதுகுறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். ஒரு பொருளை பேரம் பேசி குறைந்த விலைக்கு வாங்குவதில் இந்தியர்கள் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். ஆனால், அவர்களையே மலைத்துப் போக வைக்கும் அளவுக்கு ஒரு திராட்சையின் விலை இருந்திருக்கிறது. ஜப்பானின் ரூபி ரோமன் என்ற திராட்சையின் விலை சுமார் ரூ.9 லட்சமாம். இதனாலேயே உலகின் அதிக விலை கொண்ட […]
ஒரு கொத்து திராட்சை ரூ.9 லட்சமா..? அப்படி அதுல என்னதான் இருக்கு..? சுவாரஸ்ய தகவல்..!!

You May Like