fbpx

இறந்தும் 5 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த இளைஞர்..!! இதயம், நுரையீரல் உள்ளிட்டவை தானம்..!!

கோவை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் 5 உடல் உறுப்புகள் அரசு மருத்துவமனைகளுக்கு தானமாக வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் கடந்த 14ஆம் தேதி கோவை சூலூர் காங்கேயம்பாளையம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பெற்ற பாலமுருகனுக்கு மூளைச் சாவு ஏற்பட்டதை அடுத்து அவரது உடல் உறுப்புகளான சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், நுரையீரல் உள்ளிட்டவை 5 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது. இதயம், நுரையீரல், மற்றும் கல்லீரல் ஆகிய மூன்றும் கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டன.

சிறுநீரகங்களில் ஒன்று கோவை அரசு மருத்துவமனைக்கும் மற்றொன்று சேலம் அரசு
மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன. மூளைச்சாவடைந்த பாலமுருகனின்
உறவினர்களின் ஒப்புதலின் அடிப்படையில் அவரது உடல் உறுப்புகள் 5 பேருக்கு
வழங்கப்பட்டு 5 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

விசிக-வுடன் நாம் தமிழர் கூட்டணியா..? ஒருங்கிணைப்பாளர் சீமான் பரபரப்பு பேட்டி..!!

Fri May 19 , 2023
விசிக தலைவர் திருமாவளவனுடன் கூட்டணி அமைப்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், “விஷசாராயம் குடித்து இறந்தவர்களுக்கு அரசு 10 லட்சம் உதவி நிதி உதவி செய்கிறது. இதுதான் திராவிட மாடல் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ரூபாய் 10 லட்சம் நிதியுதவி விஷச் […]
விசிக-வுடன் நாம் தமிழர் கூட்டணியா..? ஒருங்கிணைப்பாளர் சீமான் பரபரப்பு பேட்டி..!!

You May Like