fbpx

’தமிழ்நாட்டில் இனி சுங்கச்சாவடிகளே கிடையாது’..!! அரசு எடுத்த அதிரடி முடிவு..!! அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நேற்றுடன் நிறைவு பெற்றது. முதல் நாள் காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் தனி தீர்மானத்தை கொண்டு வந்தார். மறுநாள் முதலமைச்சர் 110 விதியின் கீழ் வரி செலுத்துவது தொடர்பாக சமாதான திட்டத்தை அறிவித்தார். மேலும் 50,000 ரூபாய்க்கு கீழ் வரி நிலுவையில் இருப்பவர்களுக்கு வரி தள்ளுபடி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

3-வது நாளான நேற்று, சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சாலை மிக குறுகிய சாலைகளாக இருப்பதாகவும், புறவழி சாலை அமைக்க அதிமுக ஆட்சியில் ஆய்வு செய்யப்பட்டது என்றும், பணிகள் தற்போது தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? எனவும் தற்போதைய எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, ”கோபிசெட்டிபாளையம் சாலை குறித்து தானும் மிகவும் அறிந்தவன் தான். புறவழி சாலை அமைப்பதற்கு திமுக ஆட்சியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மொத்தமாக 8.6 கிமீ தூரத்திற்கு சாலை அமைக்க சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்வதற்காக ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

அதேபோல் 4 வழிச்சாலை அமைத்தாலும் மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி அமைப்பதில்லை என அமைச்சர் எ.வ.வேலு பேசினார். புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி முதல் மாலையீடு வரையிலான சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. ஆம்புலன்ஸ்கள், கல்லூரி பேருந்துகள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த சாலையை 4 வழி சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என புதுக்கோட்டை முத்துராஜா கோரிக்கையை முன்வைத்தார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, ”7 மீட்டர் கொண்ட மாநில சாலையை 10 மீட்டராக்கி தேசிய நெடுஞ்சாலையாக மாற்றுகின்றனர். அதில் டோல்கேட் அமைக்கின்றனர். டோல்கேட்கள் கூடாது என மத்திய அரசுக்கு நாங்கள் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறோம். முதல்வர் மாநில நெடுஞ்சாலைகள் திட்டத்தின் கீழ் அனைத்து சாலைகளும் 4 வழி சாலையாக்கப்பட்டு வருகின்றன. 4 வழிச்சாலை அமைத்தாலும் மாநில நெடுஞ்சாலைகளில் டோல்கேட் அமைப்பதில்லை” என்று தெரிவித்தார்.

Chella

Next Post

இன்று உலக மூட்டு நோய் தினம்!… மூட்டுவலிக்கு முடிவுக்கட்ட உறுதியேற்போம்!... விழிப்புணர்வு தொகுப்பு!

Thu Oct 12 , 2023
வயது முதிர்வு என்றாலே முதலில் எட்டி பார்க்கும் நோயில் முக்கியமானது இந்த மூட்டு வலி. வயதானவர்களுக்கு மட்டுமல்ல இப்போதெல்லாம் 30 வயதை தாண்டியவர்களுக்கே மூட்டு வலி பாடாய் படுத்துகிறது. இந்த நோயானது ஆர்த்ரைடிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. ஆர்த்ரைடிஸ் மற்றும் ரூமாட்டிக் வியாதிகளுக்கு எதிரான சர்வதேச அமைப்பு, 1996-ஆம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி உலக மூட்டு நோய் தினமாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 12 […]

You May Like