fbpx

Tamilanadu: நாளை ஊழியர்களுக்கு விடுமுறை கிடையாது…! என்ன காரணம்…? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!

தமிழ்நாடு முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட 43,051 மையங்களில் சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மையங்கள் செயல்படும். இந்த நிலையில் நாளை ஊழியர்களுக்கு விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்காக பொது சுகாதாரத்துறை. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, ரோட்டரி சங்கம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடவுள்ளனர். பெருமளவில் மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைகள், சினிமா அரங்குகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் சுங்கச்சாவடி போன்ற இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

சமுதாயத்தில் பின் தங்கியுள்ள மக்களான நாடோடிகள், நரிக்குறவர்கள், கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் போக்குவரத்து வசதி இல்லாத மலை கிராமங்களில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக சுகாதாரத்துறை மற்றும் பிற துறை சார்ந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

Election | ’இப்படியெல்லாம் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது’..!! அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை..!!

Sat Mar 2 , 2024
சாதி, மதம், மொழி மற்றும் இறைவழிபாட்டை அவமதிக்கும் கூற்றுகள் ஆகியவற்றின் அடிப்படையில் வாக்கு சேகரிக்கக் கூடாது என அரசியல் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டதும் உடனடியாக பிரசாரமும் துவங்கிவிடும். அரசியல் கட்சிகள் பல்வேறு வாக்காளர்களை கவர்வதற்கு பல்வேறு வியூகங்களை கையாண்டு வருகின்றன. வழக்கமாக தேர்தல் அறிவிப்புகள் வெளியிடப்படும்போதே அரசியல் கட்சிகளுக்கு கட்டுப்பாடுகளையும் சேர்த்தே தேர்தல் ஆணையம் அறிவித்துவிடும். […]

You May Like