fbpx

’விசித்ராவை போல் எனக்கும் பாலியல் தொல்லை கொடுத்தாங்க’..!! ’அவரு பெரிய நடிகர்’..!! காதல் பட நடிகை பகீர் பேட்டி..!!

நடிகை விசித்ராவைப்போல் பாலியல் தொல்லைகளை தானும் எதிர்கொண்டதாக நடிகை சரண்யா தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நடிகை விசித்ரா போட்டியாளராக பங்கேற்றுள்ளார். அண்மையில் நடந்த கதை சொல்லும் டாஸ்க்கில், நடிகர் ஒருவர் தன்னை அறைக்கு அழைத்ததாகவும், படப்பிடிப்பில் சிலர் தன்னை தகாத முறையில் தொட்டதாகவும் கூறி பரபரப்பை கிளப்பியிருந்தார்.

இந்த விவகாரம் சோசியல் மீடியாவில் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து மற்ற சில நடிகைகளும், தாங்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காதல், பேராண்மை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை சரண்யாவும் விசித்ராவைப்போல் பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டதாக நேர்கானல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ”பாலியல் சம்பந்தப்பட்ட பிரச்சனையை உடனடியாக சொல்ல வேண்டும். பல ஆண்டுகள் கழித்து சொல்ல வேண்டிய அவசியம் என்ன? என்று சிலர் விமர்சிக்கின்றனர். பெரிய பிரபலமாக இல்லாதபோது ஒரு நடிகை சொல்லும் எதுவும் இங்கே எடுபடாது. நடந்த அநியாயத்தைப் பற்றி வெளியே சொல்ல பெயர், புகழ், அதிகாரம் தேவைப்படுகிறது. விசித்ரா விஷயத்தில் இத்தனை ஆண்டுகள் கழித்து அவர் சொல்வதில் தவறு இல்லை.

சினிமாவில் ஆணாதிக்கம் நிறைய இருக்கிறது. பெண்களுக்கான பிரச்சனைகளை பார்க்க மாட்டார்கள். அதுவும் சம்பந்தப்பட்டவர் பெரிய ஹீரோ என்பதால் என்னவென்று கூட கேட்க மாட்டார்கள். எனக்கும் இதுபோல நிறைய பிரச்சனைகள் வந்திருக்கின்றன. இதையெல்லாம் தாண்டித்தான் வந்திருக்கிறேன். எனது பிரச்சனையை பற்றி பேசியிருந்தால் காது கொடுத்து கூட யாரும் கேட்டிருக்க மாட்டார்கள்.

நல்ல நிலைமைக்கு வந்தால் மட்டும்தான் நம்முடைய குரல் அனைவருக்கும் கேட்கும். இங்கு கலையை நேசிக்காமல், சினிமாவை போதையாக நினைப்பவர்கள் மட்டும்தான் பெண்களை மோகப்பொருளாக பார்ப்பார்கள். இதை பெண்கள் தாண்டி வருவது பெரிய கஷ்டம். சினிமாவில் சொல்லப்படாத கதை இன்னும் ஆயிரம் இருக்கிறது” என்று பேசியுள்ளார்.

Chella

Next Post

’அவன நம்பி நடுத்தெருவுல தான் நின்னேன்’..!! ’பணம் கட்ட முடியல’..!! பிக்பாஸ் பாலாஜி வேதனை..!!

Mon Nov 27 , 2023
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் பாலாஜி முருகதாஸ். இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியை நூல் இழையில் தவறவிட்டு 2ஆம் இடத்தை பிடித்தார். அடுத்ததாக அல்டிமேட் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதில் டைட்டில் வின்னரானார் பாலாஜி முருகதாஸ். சிறுவயதில் இருந்தே பெற்றோர் சப்போர்ட் இல்லாமல் தனி ஆளாக தன்னை உருவாக்கிக் கொண்டவர் பாலாஜி. இந்நிலையில், கிட்டத்தட்ட 10 வருட போராட்டத்திற்கு பின் ‘வா வரலாம் வா’ என்ற […]

You May Like