fbpx

”பயிற்சி கொடுக்குறேன்னு சொல்லி என்னை படுக்க வச்சு”..!! பிளஸ்1 மாணவியை கர்ப்பமாக்கிய பயிற்சியாளர்..!!

நாமக்கல் தனியார் பள்ளி ஒன்றில் கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை பல்வேறு மாநிலங்களில் இருந்து பள்ளி மாணவர்கள் பங்கேற்ற டேக்வாண்டோ போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற நிலையில், அவர்கள் தங்குவதற்காக பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக கோவை தனியார் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவி, தனது தந்தையுடன் வந்தார். பின்னர் மாணவியும், அவரது தந்தையும் தனித் தனி விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர். இதற்கிடையே, தெலுங்கானா மாநிலத்தில் இருந்து மாணவி ஒருவருடன் பயிற்சியாளராக அங்கோத்து லக்ஸ்மன் (24) என்பவர் வந்தார்.

”பயிற்சி கொடுக்குறேன்னு சொல்லி என்னை படுக்க வச்சு”..!! பிளஸ்1 மாணவியை கர்ப்பமாக்கிய பயிற்சியாளர்..!!

இவர், அந்த கோவை மாணவியிடம் முதலில் பேச்சு கொடுத்துள்ளார். பின்னர் நீ அழகாக இருக்கிறாய், உனக்கு நன்கு பயிற்சி அளித்து அதிக பதக்கங்களை பெற வைக்கிறேன் என ஆசைவார்த்தை கூறியுள்ளார். வெற்றி பெறும் நோக்கத்தில் சிறுமியும் அவரிடம் பயிற்சி பெற்றுள்ளார். ஒருகட்டத்தில் சிறுமியிடம் ஆசையாக பேசி, தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதற்கு மாணவி மறுத்துள்ளார். இதனிடையே, டிசம்பர் மாதம் 9ஆம் தேதி இரவு 9 மணியளவில் தான் தங்கிருந்த விடுதியில் இருந்து, தந்தையை பார்க்க மாணவி சென்றுள்ளார். அப்போது பயிற்சியாளர் அங்கோத்து லக்ஸ்மன் மாணவியை ஒரு அறைக்குள் தள்ளி தாக்கியதோடு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதற்கு பயந்து மாணவியும் பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மாணவியின் தாயார், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர், இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்தபோது, நடந்தவற்றை கூறியுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில், மாணவி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானதால், போக்சோ சட்டத்தின் கீழ் பயிற்சியாளர் அங்கோத்து லக்ஸ்மனனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Chella

Next Post

ஆன்லைனில் வேலை தேடிய பெண்..!! நேர்காணலுக்கு அழைத்த நபர்..!! காருக்குள் வைத்து பலாத்காரம்..!!

Tue Feb 14 , 2023
வேலைக்கான நேர்காணலுக்கு சென்ற பெண்ணை, மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பொறியல் பட்டதாரி பெண் ஒருவர் ஆன்லைன் மூலம் வேலை தேடி வந்துள்ளார். அப்போது வேலை தொடர்பாக துஷார் சர்மா என்பவரின் தொடர்பு அவருக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில், செல்போனில் பேசிய அந்த பெண்ணை சஹாரா வணிக வளாகத்திற்கு நேர்காணலுக்கு வருமாறு துஷார் சர்மா அழைத்துள்ளார். அப்பெண்ணும் வேலைக்கு […]

You May Like