fbpx

சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் திருமாவளவன்..! தொடர் ஓய்வு வேண்டும்…

காய்ச்சல் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், இது சாதாரண குளிர் காய்ச்சல் எனவும் திருமாவளவன் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும் திருமாவளவன் விரைவில் வீடு திரும்புவார் எனவும் அறிவிக்கப்பட்டது. மருத்தவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாக, டெல்லியில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் பங்கேற்றார். அதேபோல், சென்னை முதல் நெல்லை வரையிலான வந்தே பாரத் துவக்க நிகழ்ச்சி என தொடர் பயணம் காரணமாக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது.
மேலும் தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் யாரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரை சில தினங்களுக்கு சந்திக்க வர வேண்டாம் என்று கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருமாவளவன் தற்போது உடல் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார். மேலும் மருத்துவர்கள் அவரை ஒய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

Kathir

Next Post

ரீல்ஸ் மோகத்தால் சிறுவனுக்கு நேர்ந்த சோகம்; நெஞ்சை பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்..

Tue Oct 3 , 2023
தற்போது உள்ள காலகட்டத்தில், காலை எழுந்ததில் இருந்து இரவு தூங்குவது வரை ரீல்ஸ் எடுத்து பதிவேற்றம் செய்கின்றனர். இவ்வளவு ஏன், கழிவறைக்கு செல்வதை கூட அனைவரிடமும் பகிர்ந்து கொள்கின்றனர். கண்ணில் காண்பதை எல்லாம் வீடியோ எடுத்து போட்டு லைக் வாங்குகின்றனர். ஒரு லைக், ஷேருக்காக ஒரு சிலர் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக உள்ளனர். இந்த ரீல்ஸ் மோகம் சிறுவர்கள், பெரியவர்கள் ஏன், முதியவர்களை கூட விட்டு வைக்கவில்லை. ஆனால் […]

You May Like