தமிழகத்தில் அரசு பேருந்துகளில் முன்பதிவு வசதியை தற்போது தமிழக அரசு செய்திருக்கிறது. பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களை கடந்து தமிழக அரசு ஒவ்வொரு பகுதிக்கும் நூற்றுக்கணக்கான பேருந்துகளை இயக்கி வருகிறது அவற்றை முன் பதிவு செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.
இத்தகைய நிலையில், முன்பதிவு சேவையை தற்போது தமிழக அரசு விரிவுப்படுத்தி இருக்கிறது. பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் மற்றும் வசதியான பயணத்திற்காகவும் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே இருக்கைகளை இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த வசதியை அரசு பேருந்துகளில் 200 கிலோமீட்டர் தூரத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்காக விரிவுபடுத்த தற்சமயம் முடிவு செய்து இருக்கிறது. தமிழக அரசு அதன்படி கோவை, மதுரை, நெல்லை, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக முன்பதிவு சேவை விரிவுபடுத்தப்படுவதாக அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். அரசு பேருந்துகள் முன்பதிவு தளமான tnstc.in மற்றும் tnstc mobile app உள்ளிட்டவைகள் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறார் இந்த வசதி தமிழகத்தில் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.