மூன்றாவது ஏசி எகானமி வகுப்பு பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு போர்வைகளை வழங்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
இந்திய ரயில்வே பல ரயில்களில் குறைந்த கட்டணத்தில் மூன்றாவது ஏசி எகானமி வகுப்பு பெட்டிகளையும் அதிகரித்துள்ளது. இந்த பெட்டிகளின் கட்டணம் சாதாரண மூன்றாம் ஏசி வகுப்பை விட குறைவாக இருக்கும். எனினும் மூன்றாவது ஏசி எகானமி வகுப்பு பெட்டிகளுக்கு இந்த சேவை கிடைக்கவில்லை.
இந்நிலையில் மூன்றாவது ஏசி எகானமி வகுப்பு பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கும் செப்டம்பர் 20 முதல் படுக்கை விரிப்பு, போர்வை வசதி வழங்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக ரயிலின் பெர்த் எண்கள் 81, 82 மற்றும் 83, இந்த பெட்டிகளில் ஒவ்வொரு பெட்டியிலும் கைத்தறி போர்வை விர்ப்பு வைக்க பயன்படுத்தப்படும். செப்டம்பர் 20 முதல், இந்த பெர்த்கள் பயணிகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் போது கிடைக்காது.
இதற்கிடையில், ஏற்கனவே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பயணிகள் மற்றும் அவர்களின் பயண தேதி செப்டம்பர் 20 க்குப் பிறகு மற்றும் அவர்களின் பெர்த் எண்கள் 81, 82 மற்றும் 83 ஆக இருந்தால், அத்தகைய பயணிகள் அவசரகால ஒதுக்கீட்டின் கீழ் மற்ற பெட்டிகளில் தங்கவைக்கப்படுவார்கள். பயணிகளின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
முன்னதாக கொரோனா பரவலின் போது ரயில்வே அமைச்சகம் அனைத்து ரயில்களிலும் படுக்கை வசதி சேவையை நிறுத்தியது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க ரயில்வே இந்த நடவடிக்கையை எடுத்தது. பின்னர், அரசாங்கம் லாக்டவுனைத் தளர்த்தி, கோவிட்-19 கட்டுப்பாடுகளை நீக்கியபோது, ராஜ்தானி மற்றும் சதாப்தி போன்ற ரயில்களில் படுக்கை வசதி மீண்டும் கொண்டு வரப்பட்டது.. இப்போது நாடு முழுவதும் இயங்கும் அனைத்து ரயில்களின் ஏசி பெட்டிகளிலும் இது வழங்கப்படுகிறது.