fbpx

’இது அபத்தம்’..!! ’இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்’..!! மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு உதயநிதி பதிலடி..!!

இந்தியாவை இந்தி ஒன்றிணைப்பதாக மத்திய அமைச்சர் அமித்ஷா கூறுவது அபத்தம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தி மொழி தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி, சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டிருந்தார். அதில், அமைச்சர் அமித்ஷா கூறியதாவது, உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மொழிகளின் பன்முகத்தன்மையை இந்தி ஒருங்கிணைக்கிறது. சுதந்திரப் போராட்டத்தில் இருந்து இன்று வரை, இந்தி முக்கியப் பங்காற்றுகிறது. இந்தி மொழி நமது கலாச்சார பாரம்பரியம்“ என்று பேசியிருந்தார்.

இந்நிலையில், இதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், ”இந்தி தான் நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது – பிராந்திய மொழிகளுக்கு அதிகாரமளிக்கிறது’ என்று வழக்கம் போல தனது இந்தி மொழிப் பாசத்தை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். இந்தி படித்தால் முன்னேறலாம் என்ற கூச்சலின் மாற்று வடிவம் தான் இந்த கருத்து. தமிழ்நாட்டில் தமிழ் – கேரளாவில் மலையாளம். இவ்விரு மாநிலங்களையும் இந்தி எங்கே ஒன்றிணைக்கிறது? எங்கே வந்து அதிகாரமளிக்கிறது?

நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டு மொத்த இந்தியாவையும் ஒன்றிணைப்பதாக கூறுவது அபத்தமானது. இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும்” என பதிலடி கொடுத்துள்ளார்.

Chella

Next Post

சுதா கொங்காரா இயக்கும் சூர்யாவின் 43-வது படத்தின் சூப்பர் அப்டேட்..!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

Thu Sep 14 , 2023
சூர்யா – 43 படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, அவரின் 43-வது படத்தை இயக்குநர் சுதா கொங்காரா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. முன்னதாக, சுதா கொங்காரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூர்யா வென்றிருந்தார். இந்நிலையில், […]

You May Like