fbpx

இது பொய்யான குறுஞ்செய்தி..!! யாரும் நம்பாதீங்க..!! மக்களுக்கு மின்சார வாரியம் எச்சரிக்கை..!!

தற்போது பல மின் நுகர்வோர்களுக்கு, ’மின் கட்டணம் செலுத்ததால், மின் இணைப்பு துண்டிக்கப்பட உள்ளது. அப்படி துண்டிக்காமல் இருக்க இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்’ என செல்போன் எண் குறிப்பிட்டு குறுஞ்செய்திகள் வருகிறது. இப்படி மின்வாரியம் பெயரில் அனுப்பப்படும் மோசடியான குறுஞ்செய்திகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்று தேனி மின்வாரிய அதிகாரி எச்சரித்துள்ளார்.

மோசடி செய்பவர்கள் பல்வேறு வழிகளை கையாண்டு வருகின்றனர். மின் வாரியத்தின் பெயரில் ஏற்கனவே பல்வேறு முறைகளில் மோசடி அரங்கேறி வருகிறது. அந்த வகையில், பணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட உள்ளதாக கூறி புதிய வகையில் மோசடியில் இறங்கி உள்ளனர். இப்படி வரும் மெசேஜில் உள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினால், பணத்தை பறிப்பது நடக்கிறது. அடிக்கடி மின்வாரியத்தின் பெயரை பயன்படுத்தி தான் மோசடியில் ஈடுபடுகிறார்கள். எனவே, மின்சார பில் தொடர்பாக வரும் எந்த லிங்கையும் கிளிக் செய்து ஏமாந்துவிடாதீர்கள்.

இது தொடர்பாக தேனி மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தேனி வட்டத்திற்குட்பட்ட மின்இணைப்புகளுக்கு வாரிய பணியாளர்கள் மூலம் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கணக்கீட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. கணக்கீடு செய்யப்படும் மின் இணைப்புகளின் மின்கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் பற்றிய விவரங்கள் நுகர்வோர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் தகவல் தெரிவிக்கப்படும்.

அந்த குறுஞ்செய்திகளில் நுகர்வோர்களின் மின் இணைப்பு எண், செலுத்த வேண்டிய தொகை மற்றும் கடைசி நாள் விவரங்கள் மட்டுமே இடம்பெறும். கட்டணம் தொடர்பாக மின்வாரிய அலுவலர்களையோ, பொறியாளர்களையோ தொடர்பு கொள்ளுங்கள் என்று எவ்வித செய்தியும் இடம் பெறாது. ஆனால், தற்போது மின் இணைப்பு துண்டிக்காமல் இருக்க இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும் என செல்போன் எண் குறிப்பிட்டு குறுஞ்செய்திகள் வருவதாக புகார்கள் பெறப்படுகின்றன. இது முற்றிலும் ஏமாற்று வேலையாகும். மின்வாரியம் இதுபோன்ற குறுஞ்செய்திகளை எப்போதும் அனுப்புவதில்லை. எனவே, இதுபோன்ற குறுஞ்செய்திகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

"உனக்கு நாங்க முக்கியம் இல்லையா?" மகன் காதல் திருமணம் செய்ததால், பெற்றோர் செய்த காரியம்..

Sat Oct 7 , 2023
கிருஷ்ணகிரி மாவட்டம், பெருபோனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் 50 வயதான சரணவன். இவருக்கு 45 வயதான கீதா என்ற மனைவியும், 27 வயதான ரஞ்சித் குமார் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் வசித்து வரும் வீட்டின் எதிரில் 23 வயதான தீபிகா என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார். பட்டதாரியான தீபிகாவும், ரஞ்சித்குமாரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், நாளடைவில் இவர்களின் நட்பு காதலாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில், இவர்களின் காதல் விவகாரம் […]

You May Like