fbpx

இதுதான் பிரச்சனைக்கு காரணம்..!! குறுக்கே வந்த திவ்யா துரைசாமி..!! வெடித்த பஞ்சாயத்து..!! வீடியோ வெளியிட்ட குரேஷி..!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியதற்கு காரணம் பிரியங்கா தான் என்று மணிமேகலை கூறியிருந்த நிலையில், இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை நடந்தது என்பது பற்றி குரேஷி வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ”இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி பற்றி தான் அதிகமாக பேசப்படுகிறது. நானும் இரண்டு நாட்களில் இந்த பிரச்சனை முடிந்து விடும் என்று நினைத்தேன். ஆனால், பிரச்சனை நீண்டு கொண்டே இருக்கிறது. என் கண்ணால் பார்த்த விஷயங்களை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். சம்பவம் நடந்த அன்று திவ்யா துரைசாமி எலிமினேஷன் செய்யப்பட்டிருந்தார்.

அவர் வெளியேறுவதற்கு முன்பு எல்லா போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது பிரியங்கா பற்றியும் பேசி இருந்தார். பிரியங்கா எனக்கு அதிகமான சப்போர்ட் கொடுத்தார் என்று அவரை பாராட்டி பேசிக் கொண்டிருந்தார். அதைத் தொடர்ந்து எல்லோரும் திவ்யா துரைசாமி பற்றி பேசினார்கள். அப்போது பிரியங்கா நான் திவ்யா துரைசாமி பற்றி பேசலாமா? என்று கேட்டார்.

நான் கோமாளியாக இருந்தபோது நான் சரி என்று சொன்னேன். அந்த நேரத்தில் மணிமேகலை எதுவுமே சொல்லவில்லை. பிறகு திவ்யா துரைசாமி குறித்து பிரியங்கா பேசிக் கொண்டிருந்தார். அப்போது சில நிமிடங்கள் கழித்து திடீரென்று முன்னே வந்த மணிமேகலை, பிரியங்கா இது போதும் நீங்கள் நிறுத்திக் கொள்ளுங்கள். ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் யார் தொகுப்பாளர் என்று மக்கள் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் தான் எப்போதும் தொகுப்பாளர் போலவே பேசிக் கொண்டிருக்கிறீங்க என்று பேசிவிட்டார். இது அங்கிருந்த எல்லோரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

அதற்கு பிரியங்கா அவர் என்னைப் பற்றி பேசி இருக்கிறார் என்றால் நான் திவ்யா பற்றி திருப்பி பேச வேண்டுமே எனக்கான உரிமை ஏன் மறுக்கிறீங்க? என்று கேட்க, அதெல்லாம் முடியாது. நீங்க இதற்கு மேல பேசக்கூடாது என்று மணிமேகலை சொன்னார். உடனே பிரியங்கா கோபப்பட்டு வெளியே சென்றுவிட்டார். இதுதான் அன்று நடந்தது. பிறகு அடுத்த சூட்டிங் அடுத்த வாரம் என்று இருந்த நிலையில், அதற்கிடையில் பிரியங்கா சேனல் தரப்பில் மணிமேகலை சூட்டிங் ஸ்பாட்டில் அத்தனை பேர் முன்பு என்னை பேசவிடாமல் தடுத்துவிட்டார். அதனால் அடுத்த வாரம் நிகழ்ச்சியில் அவர் இதற்கு ஒரு விளக்கம் கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

அதற்கு சேனல் தரப்பினரும் நாங்கள் மணிமேகலையிடம் பேசுகிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். பிறகு அடுத்த வாரம் நிகழ்ச்சி தொடங்கப்படும் போது மணிமேகலை நார்மலாக தான் இருந்தார். அப்போது எப்போதும் போல எல்லா போட்டியாளர்களையும் வரவேற்று பேசிக் கொண்டிருந்தார். ஆனால், பிரியங்காவை பற்றி நான் வரவேற்க மாட்டேன் என்று சொல்ல ரக்சன் தான் பிரியங்காவை வரவேற்றார். பிறகு மணிமேகலை இடம் பிரியங்காவிடம் ஜாலியாக பேசுவது போல நிகழ்ச்சியை கொண்டு போங்க என்று சொல்ல அதற்கு அவர் முடியாது என்று சொல்லிவிட்டு தான் வெளியே வந்திருக்கிறார்.

இதுதான் நிகழ்ச்சியில் நடந்தது. இது தெரியாமல் சிலர் இணையத்தில் தவறாக பேசிக் கொண்டிருக்கின்றனர். நான் இவர்கள் இருவரில் யாருக்கு சப்போர்ட்டாகவும் பேசவில்லை. அன்று நிகழ்ச்சியில் என்ன நடந்ததோ அதை அப்படியே பேசுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Read More : ’என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு பிக்பாஸுக்கு போனது தான்’..!! ’குடிப்பழக்கத்தால் இப்படி இருக்கேன்’..!! நடிகர் சக்தி வேதனை..!!

English Summary

While Manimekalai had said that Priyanka was the reason behind her exit from Cook with Komali, Qureshi has released a video about what happened between the two.

Chella

Next Post

என்னது.. அரிசி உணவு புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமா? அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவுகள்..!!

Thu Sep 19 , 2024
Be Cautious! Eating Rice May Increase Cancer Risk, Shocking New Findings
அடுத்த ஷாக்கிங் நியூஸ்..!! அதிரடியாக உயருகிறது அரிசி விலை..!! என்ன காரணம்..? வெளியான பரபரப்பு தகவல்..!!

You May Like