fbpx

இளம் வயதினரிடையே ஆண்மை குறைபாடு அதிகரிக்க இதுதான் காரணம்?… இதை சரிசெய்ய தேன் ஒன்னே போதும்!

தேன் கலவை சாப்பிட்டு வருவதால் உடலில் இரத்தம் அதிகரித்து ஆண்மை பெருகும். சில வழிமுறைகளை இதில் பார்க்கலாம்.

இரத்தம் அதிகரித்து ஆண்மை, உடல் வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி விரைவாக அதிகரிக்கும். அத்திப்பழம், பேரிச்சம்பழம், தேன் ஆகிய மூன்றுமே சிறந்த இயற்கை ஆரோக்கிய உணவுகளாகும். இவை அனைத்தும் நீங்கள் நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி விரைவாக அதிகரிக்கும். குறிப்பாக பேரிச்சம்பழம் – தேன் கலவை மற்றும் அத்திப்பழம் – தேன் கலவை சாப்பிட்டு வருவதால் உடலில் இரத்தம் அதிகரித்து ஆண்மையும் பெருகும்.

தேவையான பொருள்கள்: பேரிச்சம்பழம் (விதை நீக்கியது) சுத்தமான தேன், குங்குமப்பூ. செய்முறை: பாத்திரத்திரமொன்றில் அரைக்கிலோ பேரிச்சம்பழம் மற்றும் அரைக் கிலோ தேனை போடவும், அதன் மீது குங்குமப்பூவை சிறிதளவு தூவ வேண்டும். காலையில் 7 தொடக்கம் 8 மணியளவில் இளம் வெயில் நேரத்தில் அரை மணி நேரம் அதனை ஊற வைக்க வேண்டும்.ஊறிய பிறகு அதை ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இரவு உறங்க செல்லும் முன்னர், அதில் இருந்து இரண்டு பேரிச்சம் பழத்தை எடுத்து சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டு செல்ல வேண்டும். இதனைத் தொடர்ந்து செய்துவர உடலில் இரத்தம் அதிகரித்து ஆண்மை தன்மையும் பெருகும்.

இதேபோல், அரைக்கிலோ அத்திப்பழம், தேன் மற்றும் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து கலந்து கொள்ளவும். காலை நேரத்தில் இளம் வெயில் நேரத்தில் அரை மணிநேரம் ஊறவைத்து எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். இரவு உறங்கும் முன்னர் இரண்டு அத்திப்பழம் சாப்பிட்டு பிறகு ஒரு டம்ளர் பால் குடித்த பிறகு உறங்குங்கள். இரத்த சோகை இந்த இரண்டு கலவை சாப்பிட்டு முடிக்கும் ஒரு மாத காலத்தில் உங்கள் உடலில் சுத்தமான இரத்தம் உருவாகும்.இரத்த சோகை இருக்கும் நபர்கள் உடலில் இரத்தம் அதிகரித்து ஆரோக்கியமாக இருப்பார்கள்.இயல்பாகவே ஆண்மை தன்மையினை அதிகரிக்க அத்திப்பழம் ஒரு சிறந்த உணவுப் பொருள். மேலும், பாலில் உள்ள மூலக்கூறுகளும் ஆண்மை தன்மை பெருக உதவுகிறது. அத்திப்பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவது உங்கள் ஆண்மை தன்மை பெருக வெகுவாக உதவும்.

Kokila

Next Post

திருப்பூர் மக்களுக்கு ஓர் அரியவாய்ப்பு!... தமிழில் எழுத, படிக்க தெரிந்தால்போதும் ரூ. 50,000 சம்பளம்! வேலை விவரம் இதோ!

Mon May 15 , 2023
திருப்பூர் மாவட்டம் அருகே காங்கயம், சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் காலியாக உள்ள வெளித்துறை மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் அருகே காங்கயம், சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் காலியாக உள்ள வழக்கு எழுத்தர், சீட்டு விற்பனை எழுத்தர், தட்டச்சர், காவலர், தோட்டக்காரர், திருவலகு, கூர்க்காஉதவி மின் பணியாளர் பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நேரடி நியமனம் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் […]

You May Like