fbpx

’அனைத்து மாணவர்களுக்கும் இதை தெரிவிக்க வேண்டும்’..! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!

அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றுவது தொடர்பாக மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “வரும் 2022 ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றி தேசப்பற்றை வெளிப்படுத்தவும், 75-வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை சிறப்பிக்கவும் மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் இதனை தெரிவித்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள, அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளுப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

’அனைத்து மாணவர்களுக்கும் இதை தெரிவிக்க வேண்டும்’..! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!

முன்னதாக நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை அனைவரும் சமூக வலைதள ஊடகங்களில் முகப்பு படமாக தேசியக் கொடியை வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அத்துடன் ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றும்படி பிரதமர் மோடி வலியுறுத்தினார். இதன் காரணமாக தபால் நிலையங்கள் மூலமாகவும் தேசியக்கொடி விற்பனை தற்போது நடைபெற்று வருகிறது.

Chella

Next Post

படியில் பயணம், நொடியில் மரணம்..! அரசுப் பேருந்தில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த சோகம்..!

Tue Aug 9 , 2022
பேருந்தில் இருந்து பள்ளி மாணவி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அருப்புக்கோட்டையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருச்சுழியை அடுத்த ரெங்கையன்பட்டியைச் சேர்ந்தவர் சுப்புராஜ். இவருடைய மகள் சக்திமாரி (16) பனையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், சக்திமாரி தினமும் தனது ஊரிலிருந்து அரசுப் பேருந்தில் பள்ளிக்குச் சென்று வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று மாலை சத்திமாரி வழக்கம்போல் பள்ளி […]
’இனி ஆக்‌ஷன் சீன் தான்’..!! பேருந்து படிக்கட்டில் பயணித்தால்..!! ஓட்டுநர், நடத்துனருக்கு அதிரடி உத்தரவு..!!

You May Like