fbpx

உரிமைத்தொகை ரூ.1,000 கிடைக்காதவர்கள் ரெடியா இருங்க..!! இந்த ஆவணங்கள் எல்லாம் இருக்கா..?

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இம்மாதம் இதற்கான பணிகள் நடப்பதால், பின்வரும் ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. முதலில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் யாருக்கெல்லாம் விரிவு செய்யப்படும் என்று பார்க்கலாம். அதன்படி, முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கும், முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கும், புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கும், புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கும் பணம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    ஆவணங்கள் என்னென்ன..?

    புதிய ரேஷன் அட்டை

    திருமணம் செய்யப்பட்ட சான்று

    குடும்ப தலைவி பெயர் உள்ள வங்கிக் கணக்கு

    அந்த வங்கிக் கணக்கு ஆதார் + அந்த பெண்ணின் போன் எண்ணுடன் இணைக்க வேண்டும்.

    விரிவாக்கம் : தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதாவது மேலும் 1.40 லட்சம் பேருக்கு பணம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின்படி தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு ரூ.1000 ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கூடுதல் பெண்களுக்கு பணம் வழங்கப்பட உள்ளது. தற்போது புதிதாக விண்ணப்பம் செய்பவர்கள், ஏற்கனவே விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டவர்கள் இதில் இணையலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Read More : தமிழ்நாட்டில் இன்று வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!! இந்த 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!!

    English Summary

    Special arrangements are being made for new applicants for the Artist Women’s Scholarship Scheme.

    Chella

    Next Post

    பூமிக்கு மிக நெருக்கம்..!! அழிவு உறுதி..!! எச்சரிக்கும் இஸ்ரோ தலைவர் சோம்நாத்..!!

    Mon Jul 8 , 2024
    ISRO chief Somnath has warned that there are lakhs of asteroids orbiting in this space, and if they collide with the earth, it will cause a huge disaster.

    You May Like