குழந்தை திருமணம் செய்யும் ஆண்களுக்கு எதிராக மாநிலத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதால், அடுத்த 5-6 மாதங்களில் ஆயிரக்கணக்கான கணவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்..
14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்யும் ஆண்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்ய அசாம் அமைச்சரவை சமீபத்தில் முடிவு செய்தது.. அதன்படி, 14-18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்த ஆண்கள், போக்சோ சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவார்கள். அசாம் மாநிலத்தில் தாய் மற்றும் சிசு இறப்பு விகிதம் அதிகரித்தும் வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. மேலும் அமைச்சரவை கூட்டத்திற்கு பேசிய அம்மாநில முதலமைச்சர் அசாமில் சராசரியாக 31% குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்திருந்தார்.
![](https://1newsnation.com/wp-content/uploads/2023/01/Child-Marriage-1-1024x512.jpg)
இந்நிலையில் இதுகுறித்து மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய ஹிமந்தா பிஸ்வா சர்மா “அடுத்த ஐந்து முதல் ஆறு மாதங்களில் ஆயிரக்கணக்கான கணவர்கள் கைது செய்யப்படுவார்கள்.. ஏனெனில் 14 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணை ஒரு ஆண் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டாலும் கூட, அவருடன் உடலுறவு கொள்வது குற்றமாகும்.. பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயது 18 ஆண்டுகள். வயது குறைந்த பெண்களை திருமணம் செய்பவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். பல பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் ஆயுள் தண்டனையை சந்திக்க நேரிடும்” என்று தெரிவித்தார்..