fbpx

திடீரென வீட்டை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள்..!! கனடாவில் பரபரப்பு..!! நடந்தது என்ன..?

கனடா நாட்டின் மேற்கு எல்லையில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் உள்ளது. இது நீளமான நதிகளையும், பெரிய மரங்களையும் கொண்ட பகுதியாகும். இந்த பகுதியில் திடீரென்று 100-க்கும் மேற்பட்ட பகுதிகளில் தீ பற்றி எரியத் தொடங்கியது. தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். இதன் காரணமாக இந்த பகுதி முழுவதும் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 36,000 பேர் வசிக்கும் மேற்கு கெலோனா நகரம் முழுவதும் தீ பரவத் தொடங்கியது.

இதையடுத்து, இந்த பகுதியில் இருக்கும் 2,400 வீடுகள் காலி செய்யப்பட்டுள்ளது. இதனைப் போலவே, எல்லோஃநைப் பகுதியில் காட்டுத்தீ மளமளவென பரவத் தொடங்கியுள்ளது. மேலும், அங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் கார், விமானம் மூலமாக ஊரை காலி செய்து வருகின்றனர். காட்டுத் தீ பரவும் நகரில் வசித்து வந்த 20,000 பேரில் 19,000 பேர் ஊரை விட்டு வெளியேறியுள்ளனர். மீதம் இருப்பவர்களில் உதவிக்குழுவை தவிர மற்ற அனைவரும் வெளியேறுமாறு சுற்றுச்சூழல் அமைச்சர் ஷேன் தாம்ப்சன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், பிரிட்டிஷ் கொலம்பியா நகரில் 4000 வீடுகளில் வசித்து வரும் அனைவரையும் உடனடியாக வீட்டை காலி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்பொழுது இந்த எண்ணிக்கை 15,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது அந்நகரில் உள்ள 15000 வீடுகளை காலி செய்யுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த எண்ணிக்கை 20,000 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

சந்திரயான் 2, சந்திரயான் 3 இடையே தொலைதொடர்பு இணைப்பு வெற்றி..!! இஸ்ரோ அறிவிப்பு..!!

Mon Aug 21 , 2023
சந்திரயான் 2 ஆர்பிட்டர் மற்றும் சந்திரயான் 3 லேண்டர் இடையே தொலைதொடர்பு இணைப்பு வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் – 2 விண்கலம், கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது 48 நாட்கள் பயணத்துக்குப் பின் நவம்பர் 7ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் இறங்க முடிவு செய்யப்பட்டது. எனினும் திடீரென விக்ரம் லேண்டர் கருவியின் […]

You May Like