fbpx

திக்… திக்!… பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு!… கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை!… பீதியில் மக்கள்!

Slovakia PM: ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் பிகோ மீது மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியாவின் பிரதமராக இருப்பவர் ராபர்ட் பிகோ. இங்குள்ள ஹண்ட்லோவா நகரில் நேற்று நடந்த அரசு நிகழ்ச்சியில் இவர் பங்கேற்றார். பின், ஆதரவாளர்களை சந்திப்பதற்காக கலாசார இல்லம் சென்றுள்ளார். அப்போது, மர்மநபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் பிரதமர் ராபர்ட் பிகோவை நோக்கி 5 முறை சுட்டார். இந்த சம்பவத்தில் பிரதமரின் வயிற்றில் குண்டுகள் துளைத்தன. இதையடுத்து, பாதுகாவலர்கள் பிரதமரை மீட்டு காரில் ஏற்றி சென்றனர். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்ட பிரதமருக்கு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். துப்பாக்கியால் சுட்டு தப்ப முயன்ற மர்மநபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 71 வயதான ஜுராஜ் சின்டுலா என்பது தெரியவந்தது. இந்த நபர், ஒரு தனியார் பாதுகாப்பு முன்னாள் ஊழியர் என்பதும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் என்பதும் அடையாளம் காணப்பட்டார். பிரதமர் மீதான துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு அதிபர் சுசானா குபுடோவா கண்டனம் தெரிவித்துள்ளார்.

Readmore: மாதம் ரூ.400 கல்வி உதவித் தொகையுடன் இசை பயில விண்ணப்பிக்கலாம்…!

Kokila

Next Post

நீல நிற ஆதார் அட்டை!! இதை யாரெல்லாம் வாங்கலாம்!! விண்ணப்பிப்பது எப்படி?

Thu May 16 , 2024
ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக பார்க்கப்படுகிறது. இது வெறும் அடையாள அட்டை மட்டுமில்லை. அரசோ, தனியாரோ நாம் அனைத்து உதவிகளையும் பெறுவதற்கு இந்த ஆதார் கார்டுதான் அவசியமாகிறது. மருத்துவமனையில் நோயாளிகளை அனுமதிப்பது முதல் வருங்கால வைப்பு நிதியில் பணம் எடுப்பது வரையிலும் ஆதார் கார்டுகள் முக்கிய ஆவணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆதார் கார்டை இப்போதெல்லாம் குழந்தைகளுக்கும் எடுக்கச் சொல்கிறார்கள். கடந்த 2018ஆம் ஆண்டு […]

You May Like