fbpx

திருப்பதி பிரம்மோற்சவ விழா!… செப்டம்பர் 17 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வரும் நிலையில் இரண்டு முறை பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. அதனால் பக்தர்களின் வசதிக்காக வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

இந்த வருடம் திருப்பதி திருமலையில் இரண்டு முறை பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளதால் பக்தர்களின் வசதிக்காக சென்னை திருச்சி தஞ்சாவூர் சேலம் கோயம்புத்தூர் மதுரை காரைக்குடி கும்பகோணம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து திருப்பதிக்கு முதலில் வரும் திருவிழாவிற்காக வருகின்ற செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் இந்த பேருந்துகளில் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது டிஎன்எஸ்டிசி செயலி மூலம் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

பெண்களே உஷார்..!! உரிமைத்தொகை ரூ.1000 வங்கியில் இருந்து எடுக்க ஓடிபி தேவையா..? மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை..!!

Fri Sep 15 , 2023
மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் வரும் குறுஞ்செய்தியினைத் தொடர்ந்து, OTP எண் கேட்கப்பட்டால் பகிர வேண்டாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி எச்சரித்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடக்க விழா இன்று (15.09.2023) நடைபெறுகிறது. 1000 ரூபாய் மகளிரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. உரிமைத் தொகையினை வங்கியிலிருந்து எடுப்பதற்கு உரிமைத் தொகை ATM கார்டு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், ஒரு சில மகளிருக்கு வரும் குறுஞ்செய்தியினைத் […]

You May Like