fbpx

8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை.! ரூ.19,500/- வரை சம்பளம்.! உடனே அப்ளை பண்ணுங்க.!

தமிழ்நாடு நீலகிரி நீர்வளத் துறையில் காலியாக உள்ள டிரைவர் பணியிடத்தினை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிவிப்பின்படி காலியாக உள்ள டிரைவர் பணியிடத்தை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக நீலகிரி மாவட்ட நீர்வளத்துறை அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பின்படி உதகமண்டலம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஓட்டுனர் பணிக்கு ஆள் சேர்ப்பு நடப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பாக 18 மற்றும் உச்சபட்ச வயது வரம்பாக 32 நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. எஸ்சி எஸ்டி மற்றும் இதர பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகு ரக அல்லது கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருப்பதோடு வாகனங்கள் ஓட்டுவதில் மூன்று வருட முன் அனுபவம் இருக்க வேண்டும் என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்த வேலை வாய்ப்பிற்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக மாதம் ரூ.19,500/- வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பம் உடைய நபர்கள் தங்களது சுயவிபரம் கல்விச்சான்றிதழ் ஜாதி சான்றிதழ் பிறப்புச் சான்றிதழ் வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் பணி அனுபவ சான்றிதழ் ஆகியவற்றை சுயசான்றொப்பமிட்ட நகல்களுடன்‌ கண்காணிப்புப்‌ பொறியாளர்‌, பவானி வடிநில வட்டம்‌, ஈரோடு-11 என்ற முகவரிக்கு 23.02.2024 தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிறகு வரங்களை அறிய nilgrs.nic.in என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Next Post

ஆண்களே.! தாம்பத்திய உறவில் நீண்ட நேரம் நிலைத்து நிற்க இந்த உணவுகளை கட்டாயமாக சாப்பிடக்கூடாது.!

Thu Feb 15 , 2024
இயற்கையிலேயே ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வதன் மூலம் புதிதாக ஒரு உயிரை இந்த உலகிற்கு கொண்டு வர முடியும். ஆனால் தற்போதுள்ள வேகமான காலகட்டத்தில் பலருக்கும் தேவைகள் அதிகரித்து, தூக்கமின்றியும், உணவின்றியும் ஓடிக்கொண்டிருக்கிறோம். இதனால் பலருக்கும் தாம்பத்திய உறவில் நன்றாக செயல்பட முடியாமல் குழந்தையின்மை பிரச்சனை ஏற்பட்டு செயற்கை முறையில் கருத்தரித்து வருகின்றனர். குறிப்பாக பெண்களை விட ஆண்களுக்கு தற்போதுள்ள காலகட்டத்தில் உடலுறவில் நாட்டம் இல்லாமல் போகிறது. இதற்கு முக்கிய […]

You May Like