தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிப்புவதற்கான புதிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
நிறுவனம் : தமிழ்நாடு வருவாய்த் துறை
பணி : கிராம உதவியாளர்
மொத்த காலியிடங்கள் : 2299
மாவட்டங்கள் வாரியான காலியிடங்கள் விவரம் :
அரியலூர் – 21, சென்னை – 20, செங்கல்பட்டு-41, கோயம்புத்தூர்-61, கடலூர் – 66, திண்டுக்கல் – 29, தருமபுரி – 39, ஈரோடு – 141, காஞ்சிபுரம் – 109, கரூர் – 27, கிருஷ்ணகிரி -33, மதுரை – 155, நாமக்கல் – 68,பெரம்பலூர் – 21, புதுக்கோட்டை – 27, ராமநாதபுரம் – 29, ராணிபேட்டை 43, சேலம் – 105, மயிலாடுதுறை – 13, நாகப்பட்டினம் – 68, சிவகங்கை – 46, தஞ்சாவூர் – 305, திருநெல்வேலி – 45, திருப்பூர் – 102, திருவாரூர் – 139, திருவள்ளூர் – 151, திருச்சி – 104. தூத்துக்குடி – 77, தேனி-25, திருவண்ணாமலை – 103, தென்காசி – 18, திருப்பத்தூர் -32, விருதுநகர் – 38, வேலூர் – 30, விழுப்புரம் – 31.
கல்வித்தகுதி : குறைந்தபட்ச கல்வித்தகுதி 5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.11,100 முதல் 35,100 வரை
பதவி உயர்வு : 10 ஆண்டுகளுக்கு பிறகு கிராம நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்படும்.
வயது வரம்பு : குறைந்தபட்சம் 21 – 32, 37-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பெற்றோரை இழந்தோர், ஆதரவற்ற விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவை, வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : www.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின்படி விண்ணப்பிக்க வேண்டும்.
Read More : Android Phone | ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து..!! மத்திய அரசு திடீர் எச்சரிக்கை..!!