fbpx

அலுவலக உதவியாளர்களை அழைக்க மணியை பயன்படுத்த கூடாது…! மத்திய அமைச்சர் உத்தரவு ‌‌‌‌‌…!

பல்வேறு நிலைகளில் உள்ள ‘விவிஐபி கலாச்சாரத்தை’ ஒழிப்பதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அலுவலகங்களில் உதவியாளர்களை அழைக்கப் பயன்படுத்தப்படும் மணியை அகற்றுமாறு தனது ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அலுவலக உதவியாளர்களை அழைக்க மணியைப் பயன்படுத்தக்கூடாது, மாறாக அவர்களை தனிப்பட்ட முறையில் அழைக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். அறிவுறுத்தல் முழுமையாக செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, வைஷ்னா தனது அலுவலகத்தில் இருந்த மணியை அகற்றி உள்ளார்.

ஒவ்வொரு ஊழியருக்கும் சமமான மரியாதை வழங்கப்படுவதை உறுதி செய்யவும், விவிஐபி கலாச்சாரத்தின் மனநிலையை மாற்றவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் வேலை..!! மாத சம்பளம் ரூ.52,000..!! விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி..!!

Wed Feb 22 , 2023
தமிழ்நாடு சுகாதாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். பணியின் பெயர்: அறுவை சிகிச்சைக் கூட உதவியாளர் காலிப்பணியிடங்கள்: இப்பதவிக்கு மொத்தம் 335 இடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பள விவரம்: ரூ.16,600 முதல் ரூ.52,400 வரை வழங்கப்படும். கல்வித்தகுதி: இப்பணிக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (ஒரு ஆண்டு அறுவை சிகிச்சைக் […]

You May Like