fbpx

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை மறைப்பதற்கு.. மத்திய அரசை குறை சொல்வதா..?அண்ணாமலை..!

சென்னை, தமிழகத்திற்கான ஜிஎஸ்டி நிலுவைத்தொகை அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது என பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியார்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது பின்வருமாறு,

தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி தொகை அனைத்தும் வழங்கப்பட்டு விட்டது. எனவே திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை என்பதை மறைப்பதற்கு மத்திய அரசை குறை சொல்னால் எப்படி?. ஒன்பது கோடி பேர் பயண்டுத்தும் உஜ்வாலா சிலிண்டர் விலையை குறைத்ததின் மூலம் மக்கள் அனைவரும் பயனடைந்து உள்ளனர்.

4.07 % நிதி பகிர்வு வருகிறது என்று தமிழக நிதியமைச்சர் கூறுகிறார். 39,750 கோடி மத்திய அரசு தமிழக அரசுக்கு கொடுத்துள்ளது. அது பற்றியெல்லாம் பேசவில்லை. குஜராத், உத்தர பிரதேசத்தை , விட தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருக்கிறது. ஜிஎஸ்டி கவுன்சிலில் 56 பரிந்துரைகளும் ஒரு மனதாக ஏற்ற பின்னரே வரி அமலானது. மேலும் மாநில நிதி அமைச்சரின் நேற்றைய அறிக்கை முன்னுக்கு பின் முரணாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Rupa

Next Post

காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு..! மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவசர ஆலோசனை..!

Thu Aug 4 , 2022
காவிரி கரையோர பகுதிகளில் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் ஊட்டமலை, சத்திரம், நாடார் கொட்டாய் உள்பட காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். காவிரி கரையோர மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்வளத்துறை அதிகாரிகள் […]
ஆன்லைன் ரம்மி தடை சட்டம்..!! அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு..!! முதல்வர் முக.ஸ்டாலின் அதிரடி

You May Like