ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளை தொடர்ந்து, மற்றொரு நாடு தனது குடியேற்ற சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. தொழிலாளர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள நியூசிலாந்து, குடியேற்ற விதிகளில் தற்காலிக மாற்றங்களைச் செய்து வருகிறது. தற்போது தொழிலாளர்களின் நெருக்கடியை எதிர்கொள்ளும் நியூசிலாந்து, சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. அந்த வகையில் தற்போது குடியேற்ற விதிகளில் மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது..
குடிவரவு அமைச்சர் மைக்கேல் வுட் இதுகுறித்து பேசிய போது “ குடிவரவு சட்டத்தில் மாற்றங்கள் “உலகளாவிய தொழிலாளர் பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வணிகங்களுக்கு உடனடி நிவாரணம்” வழங்குவதாகவும், விடுமுறை திட்டம் தொழிலாளர்களின் உட்கொள்ளலை இரட்டிப்பாக்கும் என்றும் கூறினார்.
கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு, இறைச்சி பதப்படுத்துதல், கடல் உணவு, சாகச சுற்றுலா மற்றும் முதியோர் பராமரிப்பு போன்ற துறைகளில் திறமையான புலம்பெயர்ந்தோருக்கு ஊதிய விதிகளில் தளர்வுகளை நியூசிலாந்து அரசு வழங்க உள்ளது.. மேலும் நாட்டிலுள்ள தொழிலாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, புலம்பெயர்ந்தோரின் விசாக்கள். ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படும்..” என்று தெரிவித்தார்..
இதற்கிடையில், பல துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்த்து போர்ச்சுகல் அதன் குடியேற்ற சட்டங்களை மாற்றியது. புதிய சட்டம் 120 நாள் தற்காலிக விசாவை வழங்குகிறது, இது போர்ச்சுகலில் வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டினருக்கு 60 நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம்.. வெளிநாட்டு ஓட்டுநர் உரிமங்களை அங்கீகரிப்பதற்காக அதன் சட்டத்தையும் மாற்றியமைத்தது.
இதே போல் ஸ்பெயின் அரசு, புதிய நடவடிக்கைகளை வழங்குவதன் மூலம் வெளிநாட்டினருக்கான வேலை அனுமதிகளை எளிதாக்கியுள்ளது பணி அனுமதி விண்ணப்பத் தேவைகளைக் குறைப்பது போன்ற பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.