fbpx

சர்க்கரை அளவு, உடல் எடையை குறைக்க!… தினமும் 28 கிராம் கொண்டைக்கடலை சாப்பிடுங்கள்!…

உடல் எடை மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுபடுத்த தினமும் 28 கிராம் கொண்டைக்கடலையை சாப்பிட்டு வந்தால் குறுகிய காலத்தில் நல்ல தீர்வு கிடைக்கும்.

இன்றைய வாழ்க்கை மற்றும் உணவு பழக்க முறையால், உடல் எடை அதிகரிப்பது மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வருவது தற்போது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. மேலும் நமது உடல் எடையைக் குறைப்பதற்காக மக்கள் ஜிம்மில் பல மணிநேரம் பல வித உடற்பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை எடுக்கின்றனர். ஆனால், அந்த முயற்சிகளாலும் பலருக்கு பெரிய அளவில் எந்த பலனும் கிடைப்பதில்லை. எனினும், சில எளிய வீட்டு வைத்தியங்கள் மற்றும் இயற்கையான வழிகள் மூலம் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். அந்தவகையில் கொண்டைக்கடலை மூலம் உடல் எடை மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும். மேலும் இதுகுறித்து நன்மைகள் பலவற்றை பார்க்கலாம்.

அன்றாட வாழ்வில் தினமும் 28 கிராம் கொண்டைக்கடலையை சாப்பிட்டால் 102 கலோரி சக்தி கிடைக்கிறது. இதனுடன், ஒரு கப் கொண்டைக்கடலை சாப்பிட்டால் தினசரி தேவைக்கு ஏற்ப சுமார் 40 சதவீதம் நார்ச்சத்து, 70 சதவீதம் ஃபோலேட் மற்றும் 22 சதவீதம் இரும்புச்சத்து கிடைக்கிறது. நம் உடல் கொண்டைக்கடலையை மெதுவாக ஜீரணிக்கின்றது. இதன் காரணமாக அடிக்கடி விரைவாக பசி எடுக்காது. மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை தடுக்கவும் இது உதவுகிறது. கொண்டைக்கடலையில் நார்ச்சத்து மற்றும் புரதச் சத்தும் அதிகமாக உள்ளன. கொண்டைக்கடலையை உணவில் சேர்த்துக் கொண்டால், அது உடல் எடையை 25 சதவீதம் குறைக்க உதவியதாக சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த கொண்டைக்கடலை, உடலில் உள்ள அத்தியாவசிய புரதச் சத்து குறைபாட்டை மிக விரைவாக குறைக்கும். ஆனால் நீண்ட நாட்களுக்கு இதை தினமும் சாப்பிடுவது ஆரோக்கியத்தை கெடுக்கும். இதை தினமும் சாப்பிடுவதால் நார்ச்சத்து அல்லது புரதச்சத்து அதிகரித்தால், வாயு, அஜீரணம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

பனிப்பொழியும் பாலைவனம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?... உலகின் மிகச்சிறிய பாலைவனமும் இதுதான்!... இன்னும் பல சுவாரஸ்யம்!

Wed Mar 15 , 2023
கனடாவில் யுகோன் பகுதியில் அமைந்துள்ள பாலைவனமே உலகின் மிக சிறிய பாலைவனம் என்று கூறப்படுகிறது. இங்கு பனிப்பொழிவு ஏற்படும் அதிசயங்களும் நிகழ்கிறது. மேலும் இங்குள்ள சுவாரஸ்யங்கள் அறிந்துகொள்ளலாம். பாலைவனங்களைப் பற்றி நினைக்கும் போதெல்லாம், ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய பாலைவனமான சஹாரா மற்றும் இந்தியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள தார் பாலைவனங்களே நம் மனதில் ஒளிரத் தொடங்குகின்றன. பாலைவனம் என்றாலே எப்போதும் வெப்பமான மற்றும் வறண்ட காலநிலை, ஒட்டகங்கள், மழை […]

You May Like