fbpx

வீட்டு மனையை அளவீடு செய்ய தாமதப்படுத்திய தாசில்தாருக்கு; நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவு…

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நல்லூர் நேரு நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருக்கு புஞ்சை புளியம்பட்டியில் 227 சதுர மீட்டர் மனை இடம் உள்ளது. இந்த இடத்துக்கு வரைபடம் தயார் செய்வதற்காக இடத்தை அளந்து அத்துமால் காண்பிக்க சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். இதற்கான கட்டணமாக கடந்த 2020-ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 19-ஆம் தேதி 400 ரூபாயை வங்கி மூலம் செலுத்தினார். இருந்தும் அவரது மனு மீது வட்டாட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து கடந்த வருடம் நவம்பர் மாதம் 16-ஆம் தேதி ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு அளித்தார். அதன்பேரில், அவர், ஈரோடு மாவட்ட நில அளவை அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்குமாறு நவம்பர் மாதம் 30-ஆம் தேதி உத்தரவிட்டார். ஆனால், அதற்கு பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதைத்தொடர்ந்து இடத்தின் உரிமையாளர் பழனிச்சாமி கடந்த 2021-ஆம் வருடம் மார்ச் மாதம் ஐந்தாம் தேதி ஈரோடு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியர், சத்தியமங்கலம் வட்டாட்சியர், சத்தியமங்கலம் வட்ட துணை ஆய்வாளர் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்தார். வழக்கினை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் பூரணி, உறுப்பினர்கள் வேலுசாமி, வரதராஜ பெருமாள் ஆகியோர் விசாரணை நடத்தி, தீர்ப்பளித்தனர். அதில், சம்பந்தப்பட்ட மனை இடத்தை சத்தியமங்கலம் தாசில்தார், வட்ட துணை ஆய்வாளர் இருவரும் சேர்ந்து வரும் செப்டம்பர் மாதம்  22-ஆம் தேதிக்குள் அளவீடு செய்து அத்துமால் செய்து புல வரைபடம் தயாரித்நு பழனிச்சாமியிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் வருவாய் பதிவேட்டில் முறையாக பதிவு செய்ய வேண்டும்.

இந்த பணியை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கண்காணித்து வட்டாச்சியர் மற்றும் வட்ட துணை ஆய்வாளருக்கு, தகுந்த அறிவுரை மற்றும் உத்தரவு வழங்க வேண்டும். இரண்டு மாத காலத்தில் அளவீடு செய்து அத்துமால் செய்யப்பட்ட வரைபடம் வழங்க தவறும் பட்சத்தில் சத்தியமங்கலம் வட்டாட்சியர் மற்றும் வட்ட துணை ஆய்வாளர் தலா ரூ.25 ஆயிரம் இழப்பீட்டு தொகையாகவும், தலா ரூ.5 ஆயிரம் வழக்கு செலவு தொகையாகவும் பழனிச்சாமிக்கு அடுத்த இரண்டு மாதத்துக்குள் வழங்க வேண்டும். தவறினால் இந்த உத்தரவு வெளியிட்ட தேதியில் இருந்து 9% வட்டி தொகையுடன், இரண்டு பேரின் ஊதியத் தொகையில் பிடித்தம் செய்யப்பட்டு புகார் தாரருக்கு வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்ப்பில் கூறியிருந்தனர்.

Baskar

Next Post

பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை...! தமிழக அரசு அறிவிப்பு... இந்த மாவட்டத்துக்கு மட்டும் தான்....

Wed Jul 27 , 2022
சென்னையில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நாள் நிகழ்வு நாளை நடைபெறுவதை முன்னிட்டு 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நாள் நிகழ்வு நாளை நடைபெறுவதை முன்னிட்டு அவ்விளையாட்டில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகையின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை ஒரு நாள் […]

You May Like