fbpx

LEAVE: இன்று தமிழகத்தின் மூன்று மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை..! உங்க மாவட்டமும் இருக்க..?

ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவில் அமைந்திருக்கும் திருவள்ளூர் மாவட்டத்திற்கும், ரத்தினகிரி முருகன் கோவில் அமைத்திருக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கும் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அதே போல சேலம் மாவட்டத்திலும் அனைத்து அம்மன் ஆலயங்களிலும் ஆடி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. அம்மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா இன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

இந்த விழாவை காண தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை புரிவர். இதனை முன்னிட்டு இன்று சேலம் மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று அனைத்து கல்வி நிறுவனங்களும், அரசு அலுவலங்களும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Kathir

Next Post

கணவனின் தோல் கருப்பாக இருப்பது குறித்த மனைவியின் இனவெறிக் கருத்துகள் கொடுமையானது!… கர்நாடக உயர்நீதிமன்றம்!

Wed Aug 9 , 2023
கணவனின் தோல் கருப்பாக இருப்பது குறித்த மனைவியின் இனவெறிக் கருத்துகள் கொடுமையானது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கர்நாடகாவை சேர்ந்த நபர் ஒருவர் விவாகரத்து கேட்டு 2012ம் ஆண்டு பெங்களூரு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்தமனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அந்த மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனுவில், தான் கருப்பாக இருப்பதை காரணம் காட்டி, தனது மனைவி தொடர்ந்து அவமானப்படுத்தி வந்ததாகவும், வரதட்சணை […]

You May Like