fbpx

இன்று செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா..! கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் பரிசு வழங்குகிறார் முதல்வர்..!

செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று நடைபெற உள்ளது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 186 நாடுகள் பங்கேற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கடந்த 28ஆம் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து, செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா மாலை 6 மணிக்கு சென்னை – நேரு உள்விளையாட்டரங்கில் தொடங்குகிறது. இவ்விழாவுக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையேற்று, வெற்றி பெற்ற வீரர் – வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்குகிறார். சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி பங்கேற்கிறார். சர்வதேச செஸ் ஒலிம்பியாட் கூட்டமைப்பின் நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர். விழாவுக்கான ஏற்பாடுகள் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது.

இன்று செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா..! கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் பரிசு வழங்குகிறார் முதல்வர்..!

வண்ணமயமான நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்காக 600 கலைஞர்கள் பங்கேற்ற ஒத்திகையும் நடந்துள்ளது. முப்பரிமாண முறையில் ஒலி ஒளி நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடக்க விழாவை ஒருங்கிணைத்த திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவனே, நிறைவு நாள் விழாவையும் ஒருங்கிணைக்கிறார். இந்த செஸ் ஒலிம்பியாட் தொடரில் இன்று இறுதிச்சுற்று போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், இந்திய மகளிர் ஏ அணி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப்பின் பங்களாவில் அதிரடி சோதனை..! சிக்கிய முக்கிய ஆவணங்கள்?

Tue Aug 9 , 2022
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் பங்களாவில் எஃப்.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக டொனால்டு ட்ரம்ப் கூறுகையில், ”ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள தனது கடற்கரை பங்களாவில் எஃப்.பி.ஐ. (FBI) அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும், இந்த சோதனை அவசியமற்றது மற்றும் முறையற்றதும் கூட என்றும் அவர் தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டு நான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை முழுமையாக விரும்பாத தீவிர டெமாக்ரேட் கட்சியினரின் சதி […]
அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப்பின் பங்களாவில் அதிரடி சோதனை..? சிக்கிய முக்கிய ஆவணங்கள்?

You May Like