fbpx

”வாக்களிக்க வரிசையில் நிற்போருக்கு டோக்கன்”..!! சத்யபிரதா சாஹூ சொன்ன முக்கிய தகவல்..!!

தமிழ்நாட்டில் நாளை 6 மணிக்கு வரிசை நிற்போர் அனைவரும் வாக்களிக்கலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழ்நாட்டில் நாளை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. நாளை மாலை 6 மணிக்கு வரிசையில் நிற்கும் அனைவரும் வாக்களிக்கலாம். வரிசையில் நிற்போருக்கு டோக்கன் வழங்கப்படும். அவர்கள் அனைவருமே வாக்களிக்க முடியும்.

தமிழ்நாட்டில் 68,321 வாக்குச் சாவடிகள் உள்ளன. இவற்றில் பதற்றமான வாக்குச் சாவடிகளாக 8050, மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகளாக 183 கண்டறியப்பட்டுள்ளன. மொத்தம் 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அவர்களில் 874 பேர் ஆண்கள், 76 பெண்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம்” என்று தெரிவித்தார்.

Read More : கோடைகாலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடுறீங்களா..? இரட்டை குழந்தைகள் திடீர் மரணம்..!! தாய்க்கு தீவிர சிகிச்சை..!!

Chella

Next Post

நாளை வாக்குப்பதிவு..!! ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்..!!

Thu Apr 18 , 2024
நாடாளுமன்ற தேர்தல் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு நாளை பொது அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு என மொத்தம் 3 நாட்கள் விடுமுறை என்பதால், வாக்கு அளிப்பதற்காக சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு நேற்று முதலே படையெடுக்க தொடங்கிவிட்டனர். இந்நிலையில், மக்களவை தேர்தலை ஒட்டி போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் […]

You May Like