fbpx

தக்காளி விலை ரூ.300 வரை உயரும் அபாயம்..!! செப்டம்பர் வரை குறைய வாய்ப்பு இல்லையாம்..!! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!!

நாடு முழுவதும் தக்காளி தட்டுப்பாடு நிலவுவதால் இன்னும் சில வாரங்களுக்கு விலை குறைய வாய்ப்பு இல்லை என தெரியவந்துள்ளது. முறையற்ற பருவமழை, போக்குவரத்து செலவு போன்ற காரணங்களால் நாடு முழுவதும் தக்காளியின் விலை கடந்த ஒரு வாரமாக பல மடங்கு உயர்ந்துள்ளது. 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய் வரை விற்பனையானது.

இது ஒரு புறம் இருக்க தக்காளியை பெருமளவு உற்பத்தி செய்யும் மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், புதிதாக தக்காளி சாகுபடி செய்யப்படவில்லை. எனவே, செப்டம்பர் வரை தக்காளிக்கு பற்றாக்குறை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆதலால், தக்காளி விலை சீரடைய செப்டம்பர் ஆகலாம் என தேசிய மண்டக்க மேலாண்மை சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கனமழை, விளைச்சல் பாதிப்பால் நாடு முழுவதும் தக்காளி விலை கிலோ ரூ.300 உயரும் அபாயம் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தக்காளியை மொத்தமாக கொள்முதல் செய்து அவற்றை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்ப நுகர்வோர் விவகாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

Chella

Next Post

பிக்பாஸ் டைட்டில் வின்னருடன் ஜோடி சேரும் அனிகா..!! அந்த ஹீரோ யார் தெரியுமா..?

Fri Jul 14 , 2023
அஜித் நடித்த என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிதா சுரேந்திரன் தற்போது சில படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் அனிகா சுரேந்திரன் நாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் முகின் என்பதும், இவர் ஏற்கனவே ’வேலன்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது […]
பிக்பாஸ் டைட்டில் வின்னருடன் ஜோடி சேரும் அனிகா..!! அந்த ஹீரோ யார் தெரியுமா..?

You May Like