fbpx

தமிழகமே…! இன்று முதல் 500 ரேஷன் கடைகளில்‌ தக்காளி விற்பனை…! அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!

தமிழக முழுவதும் இன்று முதல் 500 நியாய விலைக்‌ கடைகளில்‌ தக்காளி விற்பனை செய்ய உள்ளதாக அமைச்சர் பெரிய பெரியகருப்பன்‌ தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது இதனை கட்டுப்படுத்தும் விதமாக நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தக்காளியை மலிவான விலைக்கு வழங்குவது குறித்தும்‌ ஆலோசனை செய்யப்பட்டது. ஆலோசனைக்கு பின்‌ செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்‌ பெரியகருப்பன்; தக்காளியின்‌ விலைஒரு மாத காலமாக உயர்ந்து கொண்டே இருப்பது நாம்‌ அறிந்த ஒன்றுதான்‌.

தக்காளியின்‌ விலையை குறைப்பதற்காகமுதல்‌ கட்டமாக 66 பசுமை பண்ணைகாய்கறி கடைகளில்‌ ரூபாய்‌ 60-க்குவிற்பனை செய்யப்பட்டது. தமிழக முழுவதும் இன்று முதல் 500 நியாய விலைக்‌ கடைகளில்‌ தக்காளி விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

கொரோனாவின் அடுத்த அலை?… அமெரிக்காவில் அதிகரிக்கும் தொற்று பரவல்!… எச்சரிக்கை ரிப்போர்ட்!

Tue Aug 1 , 2023
அமெரிக்காவில் கொரோனா பரவல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) எச்சரிக்கை விடுத்துள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் அது கடந்த சில மாதமாக கொஞ்சம் குறைந்துள்ளது. இந்நிலையில் கால மாற்றத்திற்கு தகுந்தாற் போல கொரோனா பரவல் ஒவ்வொரு நாடுகளிலும் உருமாற்றம் பெற்று அதிகரிக்கவும், குறையவும் செய்கிறது. அந்த வகையில் அமெரிக்காவில் […]

You May Like