fbpx

தக்காளி தான் இப்படினா..!! இதன் விலையும் அதிரடி உயர்வு..!! பொதுமக்கள் கடும் பாதிப்பு..!!

கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய் வரை விற்கப்படுவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு மட்டுமின்றி, நாடு முழுவதும் தக்காளியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தற்போது தக்காளி விலை ரூபாய் 130-க்கு விற்கப்படுகிறது. இதனால் பெரிய உணவகங்களில் கூட தக்காளியை பயன்படுத்த உணவக உரிமையாளர்கள் யோசித்து வரும் நிலையில், சாமானிய மக்களின் நிலைமை இன்னும் பரிதாபமாக உள்ளது.

அந்த வகையில், கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.150 வரை விற்கப்படுவதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இஞ்சி ஒரு கிலோ 300 ரூபாய், பச்சை மிளகாய் 120 ரூபாய், சின்ன வெங்காயம் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், காய்கறிகளின் விலையேற்றத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Chella

Next Post

ஒரு நிமிடத்திற்கு ரூ.1 கோடி சம்பளமா..? ’லெஜண்ட்’ பட நடிகையால் திகைத்துப் போன திரையுலகம்..!!

Mon Jul 10 , 2023
சிங் சாப் தி கிரேட் என்ற படத்தின் மூலம் ஹிந்தியில் நடிகையாக அறிமுகமானவர் ஊர்வசி ரவுத்தேலா. இதையடுத்து, கன்னடத்தில் மிஸ்டர் ஐரவாதா என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். பிறகு ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒன்றிரண்டு படங்களில் நடித்தவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் ஆர்ட்டிஸ்ட்டாக மாறிவிட்டார். இதற்கிடையே, லெஜண்ட் அண்ணாச்சி சரவணன் நடித்த ‘லெஜண்ட்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார் ஊர்வசி ரவுத்தேலா. இந்நிலையில், போயபதி […]
ஒரு நிமிடத்திற்கு ரூ.1 கோடி சம்பளமா..? ’லெஜண்ட்’ பட நடிகையால் திகைத்துப் போன திரையுலகம்..!!

You May Like