fbpx

மக்களே நாளையே கடைசி..!! லேட் பண்ணாம உடனே கட்டணம் செலுத்தியிருங்க..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

சென்னை மாநகரில் குடிநீர் வாரியம் மற்றும் கழிவு நீர் வாரியம் சார்பாக 9.91 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. குடிநீர் வாரியம் 15 மண்டலங்களில் குழாய் மற்றும் லாரி மூலமாக தினந்தோறும் 100 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் குடிநீர் வாரியம் சார்பாக வீடுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே 2023-24 ஆம் நிதியாண்டில் வீடுகளுக்கு 5%, வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு 10% குடிநீர் கட்டணம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தாண்டுக்கான கட்டணத்தை மார்ச் 31ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் வரி செலுத்துவதற்கு ஏதுவாக சனி மற்றும் ஞாயிறு கிழமைகளிலும் அலுவலகங்கள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி..!! மிஸ் பண்ணாம வேலையை முடிச்சிருங்க..!!

Thu Mar 30 , 2023
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டிற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிப்போர் கடந்த ஜனவரி 1ஆம் தேதியுடன் 58 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும். அவரின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் தகுதியுடைய தமிழறிஞர்களுக்கு ரூ.3,500 உதவித் தொகை வழங்கப்படும். மேலும், மருத்துவ படியாக […]

You May Like