கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கோத்தகிரி மலைப்பாதையில் சுற்றுலா சென்ற மினி பேருந்து கவிழ்ந்து விபத்து.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கோத்தகிரி மலைப்பாதையில் சுற்றுலா சென்ற மினி பேருந்து கவிழ்ந்து விபத்து. விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பவானிசாகர் அணை காட்சி முனை அருகே நிகழ்ந்த விபத்தில் சென்னை கொளத்தூர், பெரம்பூர் பகுதிகளில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் விபத்தில் சிக்கி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
பவானிசாகர் அணை காட்சி முனை அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்து சென்ற எம்.எல்.ஏ ஏ.கே.செல்வராஜ் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.