fbpx

டிராக்டர் கவிழ்ந்து கோர விபத்து!… 4 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி!… திருமண ஊர்வலத்தில் நிகழ்ந்த விபரீதம்!

Accident: மத்திய பிரதேசம் ராஜ்கரில் நேற்று இரவு திருமண ஊர்வலத்தின் போது டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டம் பிப்லோடி பகுதியில் நேற்று இரவு திருமண ஊர்வலம் நடைபெற்றுள்ளது. அதாவது, இந்த ஊர்வலம் ராஜஸ்தானில் உள்ள மோதிபுராவில் இருந்து குளம்பூருக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது, ராஜஸ்தான் – ராஜ்கர் எல்லையான பிப்லோடி என்ற பகுதியில் சென்றுக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட போலீசார், மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது இந்த விபத்தில், 4 குழந்தைகள் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 15க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைதொடர்ந்து விபத்தில் உயிரிழந்தவர்களி குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் மற்றும் மத்தியப் பிரதேச முதல்வர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Readmore: நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது கட்டண உயர்வு..! தமிழகத்தில் முதல் கட்டமாக 36 சுங்கச்சாவடிகளில் அமல்..!

Kokila

Next Post

பரபரப்பை கிளப்பியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள்? கடந்த தேர்தல் கணிப்புகள் சொல்வது என்ன?

Mon Jun 3 , 2024
2014, 2019ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துகணிப்புகள் தேர்தல் முடிவுகளை சரியாக கணிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து பார்க்கலாம். உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கின்றன.இந்த கருத்து கணிப்புகளை சுட்டிக்காட்டி தேசிய ஜனநாயக கூட்டணி, தாங்கள் மாபெரும் […]

You May Like