fbpx

வண்டலூர் பூங்காவை சுற்றி பார்க்க வந்த பெண்ணுக்கு நடந்த விபரீதம்…! உதவி கேட்டும் வராதா ஊழியர்கள்..,

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஆங்கில புத்தாண்டு விடுமுறை என்பதால் ஏராளமான பார்வையாளர்கள் நேற்றைய தினம் குவிந்தனர்.

அதேபோல புத்தாண்டை கொண்டாடுவதற்காக படப்பையை சேர்ந்த செம்பருத்தி (20) என்பவர் தனது தோழியுடன் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு சுற்றி பார்பதற்க்கு வந்தார். அவர் நுழைவு கட்டணத்தை எடுத்த சிறிது நேரத்தில் கூட்ட நெரிசல் காரணமாக திடிரென மயங்கி கீழே விழுந்தார். பேச்சு மூச்சின்றி ஆபத்தான நிலையில் செம்பருத்தி மயங்கி விழுந்ததை கண்ட அவரின் தோழி அதிர்ச்சியடைந்து செய்வதறியாமல் பூங்கா அதிகாரிகளிடம் உதவி செய்யுமாறு கேட்டபோது தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று அலட்சியமாக கூறியுள்ளனர்.

பின்பு பூங்காவிற்க்கு தனியார் ஆம்புலன்ஸ்வுடன் வந்த போலீசார் மயங்கி விழுந்த செம்பருத்தியை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றினர், அப்போது ஓட்டுனர் உடன் பூங்கா நிர்வாகி யாரவது வர வேண்டும் என்று வெகு நேரமாக கேட்டும் போக மறுத்ததால் காவலர் ஒருவர் உடன் சென்றார். இதனால் பூங்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் உதவி செய்வதற்க்கு பூங்கா நிர்வாக அதிகாரிகள் மறுத்தது பார்வையாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kathir

Next Post

விஜய் தேவரகொண்டாவுடன் ஹோட்டலில் புத்தாண்டு கொண்டாடினாரா இந்த இளம் நடிகை?

Mon Jan 2 , 2023
பொதுவாக சினிமா நட்சத்திரங்கள் ஜோடியாக எங்கு சென்றாலும் அது மிகவும் பரபரப்பாக பேசப்படும். அதேப்போல சில நடிகர் நடிகைகள் தங்களின் காதல் உறவுகளை பற்றி வெளிப்படையாக சமூக வலைதளங்களில் தெரிவிப்பது உண்டு. ஒரு சிலர் தங்களின் மார்கெட் குறைந்து விடும் என்றும் வீட்டில் பெற்றோர் எதிர்ப்பு போன்ற காரணங்களாலும், தங்களது காதலை வெளி உலகுக்கு தெரிவிக்காமல் இருப்பர். இந்த நிலையில் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் காதலிப்பதாக நீண்ட நாட்களாக […]

You May Like