fbpx

‘ஆம்புலன்ஸ்-க்கு வழிவிடலன்னா அவ்வளவு தான்’ அரசு அதிரடி கெடுபிடி.!

நூற்றாண்டுகள் ஆயிரம் தாண்டினாலும் விபத்துகளுக்கும் அதன் பலிகளுக்கும் பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. இதனை விட மிகப்பெரிய வருத்தம் என்பது அவசரத்தில் வரும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடாமல் இருப்பது தான்.

இதை தடுக்க தமிழக அரசு அரசாணை ஒன்று வெளியிட்டுள்ளது. அதன் படி, “தமிழகத்தில் உள்ள சாலைகளில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பபடும் என தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் , தீயணைப்பு வாகனங்களுக்கும் வழிவிடத் தவறினாலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை தெறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள் குறித்த அரசாணையில், மக்களுக்கு மட்டுமின்றி ஆம்புலன்ஸ் வாகனங்களும் தேவையின்றி ஒலிப்பானை இயக்கி சத்தமெழுப்பினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் ஆணை பிறப்பித்துள்ளது.

ஆம்புலன்ஸ் வாகனம் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கினாலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல வாகனங்களில் வாகனங்களை தாண்டி பொருட்கள் வெளியே தாங்கி செல்வதால் அந்த வாகனத்திற்கு வெளியே சரக்குகள், கம்பிகள் இருந்தால் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Baskar

Next Post

பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை..!! திருடியது இவர்தான்..!! நடிகை பார்வதி நாயர் பரபரப்பு புகார்..!!

Thu Oct 20 , 2022
நடிகை பார்வதி நாயர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நிமிர்ந்து நில், என்னை அறிந்தால் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பார்வதி நாயர். இவர், சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வருகிறார். இந்நிலையில், இன்று அவருடைய வீட்டில் விலை மதிப்புமிக்க பொருட்கள் காணாமல் போனதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவருடைய வீட்டில் இரண்டு வருடமாக வேலை செய்துவந்த நபர்தான் அதிக விலை […]
பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை..!! திருடியது இவர்தான்..!! நடிகை பார்வதி நாயர் பரபரப்பு புகார்..!!

You May Like