fbpx

போக்குவரத்துப் பணி..!! டிசம்பர் 28ஆம் தேதி சம்பவம் இருக்கு..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 5,000-க்கும் மேற்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்கள் காலியாகவுள்ள நிலையில், முதல்கட்டமாக 685 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்ப சமீபத்தில் அரசாணை வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 27ஆம் தேதி எழுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களை சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் ஓட்டுநர் நடைமுறை தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான தேர்வு டிசம்பர் 28ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் தவறாமல் இதில் கலந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த ஓட்டுநர் நடைமுறை தேர்வில் எந்தவித குளறுபடிகளும் நடைபெறாமல் தகுதியானவர்களுக்கு சரியான மதிப்பெண் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Chella

Next Post

’2,500 கடன் செயலிகள் நீக்கம்’..!! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தகவல்..!!

Tue Dec 19 , 2023
2,500 மோசடி கடன் செயலிகளை ப்ளே ஸ்டோரில் இருந்து கூகுள் நீக்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ப்ளே ஸ்டோரில் இருந்து சுமார் 2,500 மோசடி கடன் செயலிகளை கூகுள் நீக்கியுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த அவர், “மோசடி கடன் பயன்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு ரிசர்வ் வங்கி மற்றும் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. நிதிநிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சிலின் […]

You May Like