fbpx

சிறைக்குள் வைத்து பெண் மருத்துவர் பாலியல் பலாத்கார முயற்சி.. கைதியின் பயங்கர செயல்..!!

டெல்லியில் உள்ள மன்டோலி ஜெயிலில் இருக்கும் கைதிகளுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக பெண் மருத்துவர் ஒருவர் இருக்கிறார். இந்த பெண் மருத்துவர் நேற்று முன்தினம் வழக்கம்போல கைதிகளின் உடல்நிலையை பரிசோதனை செய்துள்ளார்.

அப்போது கற்பழிப்பு வழக்கில் தொடர்புடைய விசாரணை கைதி ஒருவர், திடீரென பெண் மருத்துவரை குளியல் அறைக்குள் தள்ளி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். உடனே அந்த பெண் மருத்துவர் சத்தம் போட்டு அலறியதால் அங்கிருந்த சிறை காவலர்கள் ஓடி வந்து அவரை மீட்டனர்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைதியை பிடித்து விசாரித்து வருகின்றனர். ஜெயிலுக்குள் பெண் மருத்துவரை கைதி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Rupa

Next Post

‘அன்பில் மகேஷுக்கு ’ பன்றிக்காய்ச்சல் .. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

Wed Sep 28 , 2022
அமைச்சர் அன்பில் மேகேஷுக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது உடல் நிலை சீராக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் , பன்றிக் காய்ச்சல் அதிகரித்த வண்ணம் உள்ளது. குழந்தைகளை ப்ளூ காய்ச்சல் தாக்கி வருகின்றது. தலைமைச் செயலகத்தில் 2 நாட்களுக்கு முன்பு அமைச்சரவைக் கூட்டம்நடந்தது. இதில் பள்ளிக்கல்வித்துசை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் […]

You May Like