fbpx

மஞ்சள், மசாலா பொருட்கள்..!! ரேஷன் கடைகளில் இனி இந்த பொருட்களையும் வாங்கலாம்..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அடுத்த இரண்டு மாதங்களுக்கு ரேஷனில் துவரம் பருப்பு, பாமாயிலை இலவசமாக வழங்குவது குறித்து, அரசு பரிசீலித்து வருவதாக தகவல் ஒன்று வெளியாகியிருந்தது. இப்போதைக்கு அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், அக்டோபர், நவம்பர் மாதங்களில் ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்காக, நுகர்பொருள் வாணிப கழகம், அடுத்த 3 மாதங்களுக்கு தேவைப்படும் 60,000 டன் துவரம் பருப்பு, ஒரு லிட்டர் பாக்கெட் கொள்ளளவில் 6 கோடி லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்ய உள்ளதாம். பண்டிசை சீசன் துவங்க உள்ளதால், உணவு தானியங்களின் தேவையும் அதிகரித்துள்ளது. அதனால், அனைத்து கார்டுதாரர்களுக்கும் அடுத்த 2 மாதங்களுக்கும், ரேஷனில் பருப்பு, பாமாயிலை இலவசமாக வழங்கலாமா என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையே, ரேஷனில் விரைவில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வலம் வருகின்றன. அதேபோல, டான் டீ நிறுவனத்தை லாபத்தில் கொண்டு சென்று, ரேஷன் கடைகளில் தேயிலை துாள் விற்பனை செய்யும் நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்கப் போவதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் மற்றொரு முக்கிய அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

அதன்படி, கூட்டுறவு பொருட்களை, ரேஷன் கடைகளில் விற்க உத்தரவிடப்பட்டுள்ளதாம். அதாவது, கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் ஈரோடு வேளாண் உற்பத்தியாளர்கள் மங்களம் என்கிற பெயரில் மஞ்சள், சமையல் எண்ணெய், பருப்பு வகைகள், சோப்பு ஆகிய அனைத்துப் பொருட்களையும் விற்பனை செய்து வருகின்றனர். இந்த பொருட்கள் அனைத்துமே குறைவான விலையில் இருப்பதுடன், நல்ல தரமானதாகவும் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, இந்த பொருட்களை எல்லாம், மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாதந்தோறும் 170 டன் மஞ்சள், 36 மசாலா பொருட்கள், 161 டன் மாவு வகைகள், 132 டன் உளுந்தம் பருப்பு மற்றும் எண்ணெய் வகைகள் விற்பனை செய்ய வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு தொழிலாளர்களால் தயார் செய்யப்படும் மசால் வகைகள், பருப்பு வகைகள் அனைத்துமே, இனி ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

”இப்போது இன்னும் ரெண்டு டாட்டூ கூட போட்டுக்கோங்க”..!! அனன்யாவுக்கு ஆண்டவர் கொடுத்த பதிலடி..!!

Mon Oct 9 , 2023
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 40 நாட்களுக்கு பின் நடக்க வேண்டிய சண்டைகள், இந்த சீசனில் முதல் வாரமே நடந்து கொண்டிருக்கிறது. எப்படியும் வயதான போட்டியாளர்களான பவா செல்லதுரை மற்றும் யுகேந்திரன் வாசுதேவன் நாமினேட் ஆன நிலையில், இருவரில் ஒருவர் தான் எலிமினேட் ஆவார்கள் என எதிர்பார்க்கப்பட்டனர். ஆனால், கடைசியில் ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்ஸும் பவா செல்லதுரை பெயரை சொன்ன நிலையில், ஒருவர் கூட சொல்லாத அனன்யா ராவ் எவிக்ட் ஆகி பிக்பாஸ் வீட்டை […]

You May Like