fbpx

பிக்பாஸ் வீட்டில் முதல்முறையாக அரெஸ்ட் ஆன இரண்டு போட்டியாளர்கள்..!! இவர்கள் தானா அது..? எதற்காக தெரியுமா..?

பிக்பாஸ் 7-வது சீசன் ஆரம்பமாகி ஒரு சில நாட்களிலேயே சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. அந்தவகையில், இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோவில் விஷ்ணுவிற்கும், பிரதீப் ஆண்டனிக்கும் இடையில் வாக்குவாதம் நடக்கிறது. இதையடுத்து, தற்போது இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

அதில் பிக்பாஸ் “இந்த பிக்பாஸ் வீட்டில் முதன்முறையாக இரண்டு பேருக்கு அரெஸ்ட் வாரண்டுகள் பிறப்பிக்கப்படவுள்ளன” எனக் கூறுகிறார். மேலும், “மக்களை எண்டர்டெய்ன்மென்ட் பண்ணுறதுதான் உங்களுடைய முதல் வேலையாக இருக்குமென்று உங்க எல்லாருக்கும் சொல்லப்பட்டது.

அந்த அடிப்படையில் போன வாரம் அனைவரையும் கவனித்ததில் அரெஸ்ட் வாரண்ட் உறுதி செய்யப்பட்டவர்கள் அக்ஷய மற்றும் வினுஷா இவர்கள் இருவரும் ஜெயிலில் அடைக்கப்படுவார்கள்” என பிக்பாஸ் கூறுகிறார். இதையடுத்து, அக்ஷயா தனியாக சென்று கண்ணீர் விட்டு அழுகிறார்.

இதற்கிடையே இந்த வாரம் எவிக்‌ஷன் செய்யப்பட்டவர்கள் அக்‌ஷயா, ஜோவிகா விஜயகுமார், மாயா, பூர்ணிமா ரவி, பிரதீப் ஆண்டனி, விசித்ரா, விஷ்ணு விஜய் ஆகியோர் தான்.

Chella

Next Post

விராட் கோலிக்கு தங்கப் பதக்கம்..!! அட அப்படி என்ன செஞ்சிட்டாரு..? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

Mon Oct 9 , 2023
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறும். இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஆட்டம் சென்னையில் […]

You May Like