fbpx

சோகம்…! வெயில் தாங்காமல் மயங்கி கீழே விழுந்து இரண்டு பேர் உயிரிழப்பு…!

வாக்கு செலுத்த வந்த இடத்தில் வெயில் தாங்காமல் மயங்கி கீழே விழுந்து இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஒரேகட்டமாக 39 தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலையில் இருந்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவுகள் நடந்தன. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு காலமாக தாமதமானது. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 24.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

அனைத்து வாக்காளர்களும் சிரமமின்றி வாக்களிக்க குடிநீர், கூடாரம், கழிப்பறை, சாய்வு தளம் போன்ற அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்யப்பட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் போதிய முன்னேற்பாடுகள் இல்லாததால் வாக்காளர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கொண்டையம்பள்ளி பகுதி வாக்குச்சாவடியில் மூதாட்டி சின்ன பொண்ணு (77) வெயில் தாங்காமல் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். அதேபோல, சேலம் பழைய சூரமங்கலம் வாக்குச் சாவடியில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

Vignesh

Next Post

புல்லட் ரயிலில் இருந்த 16 அடி பாம்பு! அதிர்ச்சி அடைந்த பயணிகள்! எங்கு தெரியுமா?

Fri Apr 19 , 2024
ஜப்பான் நாட்டில் 60 ஆண்டுகளாக இயங்கி வரும் புல்லட் ரயிலில் 16 அடி பாம்பு இருந்ததை கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஜப்பான் நாட்டில் புல்லட் ரயில் சேவைகள் துவங்கி சுமார் 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதுவரை, ஜப்பானின் புல்லட் ரயில் சேவை குறித்து எந்த ஒரு புகாரும் எழுந்ததில்லை. சரியான நேரத்திற்கு சரியான நிலையத்திற்கும் வந்தடையும் ஜப்பான் புல்லட் ரயில் மக்களுக்கு பெரிதும் பயன்படும் சேவையாக இருந்து வருகின்றது. […]

You May Like