fbpx

உச்சநீதிமன்றத்திற்கு சென்ற உதயநிதியின் சனாதன வழக்கு..!! டென்ஷன் ஆன தலைமை நீதிபதி..!! அதிரடி உத்தரவு..!!

சனாதனத்திற்கு எதிராக அமைச்சர் உதயநிதி பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின், கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே மீது நடவடிக்கை கோரும் மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று வலதுசாரி வழக்கறிஞர்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். ஆனால், நீதிபதிகள் இதனை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர். அதாவது மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைக்க வேண்டுமெனில், அது குறித்து முன்கூட்டியே நீதிமன்ற பதிவாளரிடம் தெரிவிக்க வேண்டும்.

பின்னர் பதிவாளர் ஒரு எண்ணை கொடுப்பார் இதை வைத்துதான் அவசர மனு குறித்த கோரிக்கையை எழுப்ப முடியும். இப்படி இருக்கையில், சில வழக்கறிஞர்கள் திடீரென தலைமை நீதிபதியின் முன்வந்து “சனாதனம் குறித்து அவதூறாக பேசிய உதயநிதி, பிரியங்க் கார்கே மீதான வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.

இதை கேட்டு கோபமடைந்த தலைமை நீதிபதி, “எந்த வழக்காக இருந்தாலும் உரிய வழிமுறையை பின்பற்ற வேண்டும். வழக்கறிஞர்களே இப்படி ஒழுங்கீனமாக நடந்து கொள்ளலாமா?” என்று சரமாரியாக விளாசினார். மேலும், இந்த வழக்கை இதனை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று கூறினார். இதனையடுத்து, மீண்டும் திங்கட்கிழமை இதே கோரிக்கைகளை வலதுசாரி வழக்கறிஞர்கள் எழுப்ப இருக்கின்றனர்.

Chella

Next Post

திருச்சியில் காய்ச்சல் காரணமாக பெண் உயிரிழப்பு..!

Fri Sep 15 , 2023
திருச்சியில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த கனகவல்லி என்பவர் உயிரிழப்பு திருச்சி திருவானைக்காவல் வாய் பகுதியை சேர்ந்தவர் ராஜா சுகுமார், அவரது மனைவி கனகவல்லி வயது 38. கனகவல்லிக்கு நேற்றைய தினம் உடல் நிலை சரியில்லாத காரணாத்தால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து வரப்பட்டார், அங்கு அவருக்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டத்தை அடுத்து அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். திருச்சி அரசு மருத்துவமனையில் அவருக்கு […]

You May Like