fbpx

முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம்..‌.! மின்சார வாரியம் அதிரடி உத்தரவு…!

முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும் மின்சார வாரிய நிர்வாக இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், அரசு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ள இடங்களைப் பொறியாளர்கள் முன்கூட்டியே மின் பிரச்சினை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

அந்த பகுதிகளில் மின் தடை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒருவேளை மின் தடை ஏற்பட்டால் அதனை உடனே சரி செய்ய மாற்று ஏற்பாடுகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். மின்சார தடை பிரச்சனை ஏற்படும் இடத்தில் மின்சார வாரிய ஊழியர்கள் பணியில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகையின் போது மின் தடை ஏற்பட்ட நிலையில் தமிழக மின்சார வாரியம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

ஸ்ரீவில்லிபுத்தூர்| 17 வயது சிறுமியை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை…..! மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!

Fri Jun 16 , 2023
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார்த்திகை பற்றி பகுதியைச் சேர்ந்தவர் முத்து ஸ்ரீரங்கம் (35) இவருடைய கணவர் கார்த்தி இந்த தம்பதிகளுக்கு சூரியபிரகாஷ் 19 என்ற மகனும் மஞ்சுளாதேவி 17 என்ற மகளும் இருக்கின்றனர் கருத்து வேறுபாடு காரணமாக, இன்று தம்பதிகள் பிரிந்து வாழ்ந்து வந்தனர் தன்னுடைய குழந்தைகளுடன் முத்து ஸ்ரீரங்கம் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் முத்து ஸ்ரீரங்கத்திற்கு அவருடைய தங்கையின் கணவர் ஈஸ்வர அய்யனார் (35) என்பவர் தொடர்ந்து […]

You May Like