fbpx

எதிர்கட்சிகளுக்கு தொடர்ந்து நெருக்கடி… நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஐ.நா.வின் நம்பிக்கை நிறைவேறுமா?…

தேர்தலை முன்னிட்டு இந்தியாவில் வாக்காளர்களின் அரசியல் மற்றும் சமூக உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனிடையே டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு உள்ளிட்டவை குறித்து அமெரிக்கா மற்றும் ஜெர்மனி ஆகிய அரசுகள் கருத்து தெரிவித்திருந்தன.

இதற்கு இந்திய அரசு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட்டதாக கூறி சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதர்களுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியது.

இந்த நிலையில், ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் செய்தியாளர்களிடம் பேசியபோது, இந்தியாவில் நிலவி வரும் அரசியல் சூழல் தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், “தேர்தல் நடைபெறும் எந்தவொரு நாட்டையும் போலவே, இந்தியாவிலும் வாக்காளர்களின் அரசியல் மற்றும் சமூக உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, சுதந்திரமான மற்றும் நியாயமான சூழ்நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.

Baskar

Next Post

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் எடுத்த விபரீத முடிவு.. சோகத்தில் தேனி!

Fri Mar 29 , 2024
தேனி மாவட்டம் சின்னமனூர் சொக்கநாதபுரம் தண்ணீர் தொட்டி தெருவில் வசித்து வந்தவர் செவந்திவீரன். இவர், தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்ற நிலையில், அதனை திருப்பி செலுத்த காலதாமதம் ஆகியுள்ளது. இதனால், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்த தனியார் நிறுவன ஊழியர்கள், செவந்திவீரனை தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டிச் சென்றுள்ளனர். தொடர்ந்து இரண்டு நாட்களாகவே தனியார் நிறுவன ஊழியர்களின் நெருக்கடி அதிகரித்துள்ளது. இதையடுத்து, வியாழனன்று […]

You May Like