fbpx

தீண்டாமையை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள… முடியாது டிடிவி தினகரன் டுவிட்…!

சென்னை, தீண்டாமையைப் போலவே மத வெறுப்பும் மோசமானது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் டிடிவி தினகரன் கூறியிருப்பதாவது;-

தீண்டாமையைப் போலவே மத வெறுப்பும் மிகவும் மோசமானது. சென்னையில், தலையில் தொப்பி அணிந்த இஸ்லாமிய சிறுவனைக் கேலி செய்யும் விதமாக நிகழ்ந்த செயலை ஏற்க முடியாது. நல்லிணக்கத்தை குலைக்கும் இத்தகையை செயல்களை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று கூறியுள்ளார். அதேபோல், தென்காசி அருகே நடைபெற்ற தீண்டாமை சம்பவத்தை கண்டித்து வெளியிட்ட மற்றொரு டுவிட் பதிவில் டிடிவி தினகரன் கூறியிருப்பதாவது:-

நவீன யுகத்திலும் தீண்டாமை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதிலும் மாணவச் செல்வங்களின் மனதில் நஞ்சை விதைக்கும் வகையிலான செயல்பாடுகள் கண்டனத்திற்குரியவை. தென்காசியில் மட்டுமல்ல, தமிழகத்தில் இனி எந்த இடத்திலும் இத்தகைய சம்பவங்கள் நிகழக்கூடாது என கூறியுள்ளார்.

Baskar

Next Post

பேருந்து ஏற காத்திருந்தவர்கள் மீது லாரி மோதல்… மஞ்சள் நீராட்டு விழாவுக்கு செல்ல இருந்த  6 பேர் பலி …

Sun Sep 18 , 2022
சேலத்தில் இருந்து சென்னை புறப்படவிருந்த பேருந்தில் ஏறிக்கொண்டிருந்த போது   எதிரே வந்த டிப்பர் லாரி அதி பயங்கரமாக மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கம் பாளையத்தைச் சேரந்த திருநாவுக்கரசு (65) , ரவிக்குமார் (41) , செந்தில் வேலன் (40 ) , சுப்பிரமணி (40) உள்பட 7 பேர் சென்னை சென்றுகொண்டிருந்தனர். இவர்களின் உறவினர் சென்னையில் இருக்கின்றார். அவர் வீட்டு மஞ்சள் நீராட்டு விழா […]

You May Like