fbpx

V. J. Chitra | ”இன்னும் 6 மாசம் தான் டைம்… அதுக்குள்ள முடிங்க”..!! நடிகை சித்ரா மரண வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

நடிகை சித்ரா மரண வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகை சித்ரா மர்மான முறையில் உயிரிழந்தார். இதுதொடர்பாக அவரது கணவர் ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வழக்கை சென்னைக்கு மாற்றக் கோரியும், விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிடக் கோரியும் சித்ராவின் தந்தை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

2021ஆம் ஆண்டில் இருந்தே வழக்கு விசாரணை குற்றச்சாட்டுப்பதிவு செய்யும் கட்டத்திலேயே இருப்பதாக அவர் கூறியிருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, 67 சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Chella

Next Post

”மரண வாக்குமூலத்தை மட்டுமே வைத்து தண்டனை வழங்க முடியாது”..!! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Fri Aug 25 , 2023
மரண வாக்குமூலத்தை மட்டுமே வைத்து, ஒருவரை குற்றவாளியாக கருதி தண்டனை வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மகன் மற்றும் இரண்டு சகோதர்களை எரித்துக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டு, உயிரிழந்தவர்கள் அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்பட்டவரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இறக்கும் தருவாயில், அவர்களுக்கு வேறு எந்த உள்நோக்கமும் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றும் மரணிக்கும்போது உண்மையே பேசுவார் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய், ஜே.பி. […]

You May Like