தமிழக போக்குவரத்து துறையில் பணி ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருவதுடன், காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது சர்ச்சையாக வெடித்திருக்கிறது. இந்தநிலையில், இது தொடர்பாக உரையாற்றிய தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்ததாவது, போக்குவரத்து துறையில் காலி பணியிடங்கள் உண்டாவது இயற்கையானது தான் எனவும், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தியதால் ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
அத்துடன் மிக விரைவில் இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், ஆகவே போக்குவரத்து துறையில் இருக்கின்ற காலி பணியிடங்கள் மிக விரைவில் நிரப்பப்பட்டு பணியிடங்கள் அனைத்தும் முழுமை அடையும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.