fbpx

காளை மாட்டின் மீது வந்தே பாரத் ரயில் மோதி முன்பக்கம் தகர்ந்தது…

குஜராத்தில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அதிவேக ரயில் வண்டி காளைமாட்டின் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் முன்பக்கம் தகர்ந்தது.

குஜராத்தின் காந்திநகர் மற்றும் மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பையை இணைக்கும் 3-வது வந்தேபாரத் ரயில் சேவை செப்டம்பர் 30ம் தேதி தொடங்கப்பட்டது.

இந்நிலையில் காலை 11 மணி அளவில் பத்வா மற்றும் மணி நகர் ரயில் நிலையத்திற்கு அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது மாடுகள் குறுக்கே வந்துள்ளது. இதனால் ஏற்பட்ட விபத்தில் ரயிலின் முன்பக்கம் தகர்ந்தது. அதிர்ஷ்டவசமாக ரயில் நிறுத்தப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

பழுது ஏற்பட்ட ரயில் எஞ்சினை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நவீன வசதிகள் கொண்ட இந்த ரயில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. ரயில் பெட்டிகள் சென்னையில் உள்ள ஐசிஎப்பில் தயாராகின்றது. புது டில்லி –வாரணாசி ,  டெல்லி ஸ்ரீமாதா வைஷ்ணவி தேவி காத்ரா ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றது.

Next Post

பொன்னியின் செல்வன் நடிகர்களுக்கு சம்பளம் இத்தனை கோடியா? வெளியான முழு லிஸ்ட்..

Thu Oct 6 , 2022
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்க நடிகர்கள் வாங்கிய சம்பளம் தொடர்பான முழு லிஸ்ட் வெளியாகி உள்ளது. ஒட்டு மொத்த திரை உலகமும் எதிர்பார்த்துக் காத்திருந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியானது. படம் வெளியானதில் இருந்து சிறந்த விமர்சனங்களை பெற்று மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழுவினர்தெரிவித்துள்ளனர். பிரம்மாண்டத்தின் உச்சமான பொன்னியின் செல்வன்திரைப்படத்தில் நட்சத்திரங்கள் வாங்கியுள்ள சம்பளம் குறித்து பேசப்பட்டு வருகின்றது. திரைப்படத்தின் […]

You May Like