fbpx

மக்களே அடுத்த சிக்கல்…! வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு… தலைமைத் தேர்தல் அலுவலர் தகவல்….!

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து நாளை விவாதிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து, தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தனது அறிவிப்பில்; இந்தியா முழுவதும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள், நாளை தொடங்கவுள்ளது. இந்தப் பணிகளை 2023-ம் ஆண்டு ஆண்டு மார்ச் மாதத்தில் முடிக்க இந்தியத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது மிகப்பெரிய பணியாகும். இந்தப் பணிக்கு அரசியல் கட்சிகளின் முழு ஒத்துழைப்பு அவசியமாகும், தமிழ்நாட்டில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை வெற்றிகரமாக நடத்த கட்சிகளின் ஆலோசனைகள் பெறப்படும். வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு, இந்தப் பணிகள் அக்டோபர் 1-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. தற்போது வாக்காளர் அட்டையில் பெயர்களைச் சேர்க்க புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது.

தற்போதுள்ள நிலவரப்படி, 18 வயது பூர்த்தியான பிறகே வாக்காளர் அட்டையில் பெயர் சேர்க்க முடியும், இந்த பெயர் சேர்ப்புப் பணி, ஜனவரி 1-ம் தேதியை மையப்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது. ஜனவரி 1-ம் தேதிக்குள் யாருக்கெல்லாம் 18 வயது பூர்த்தி ஆகிறதோ அவர்களே வாக்காளர் அட்டையில் தங்களின் பெயர்களைச் சேர்க்கலாம். ஆனால், ஜனவரி 2-ம் தேதியன்று ஒருவருக்கு 18 வயது பூர்த்தியாகிவிட்டால், அவர் அடுத்ததாக நடைபெறக் கூடிய சுருக்க முறைத் திருத்தப் பணிகளின் போதுதான் பட்டியலில் பெயரைச் சேர்க்க விண்ணப்பிக்க முடியும், ஒருநாள் பின்தங்கி இருப்பதால் ஓராண்டு வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதை அனைத்தும் தவிர்க்க இந்த நடைமுறை மேற்கொள்ள உள்ளதாக கூறியுள்ளார்.

Also Read: வாகன ஓட்டிகளே… சாலைப் பாதுகாப்புக்கு அறிவியல் ரீதியாக சென்னை ஐஐடி, தமிழக அரசு முன்னெடுக்கும் புதிய முயற்சி…!

Vignesh

Next Post

Liquor Policy: வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் பழைய நடைமுறை...! அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு...!

Sun Jul 31 , 2022
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு புதிய மதுபான கலால் கொள்கையை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. தற்போது, ​​டெல்லியில் 720 க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் உள்ளன, அதில் 260 தனியார் கடைகள். இந்த தனியார் மதுக்கடைகள் அனைத்தும் கடந்த ஆண்டு முதல் திறக்க அனுமதி நிறுத்தப்பட்டது. புதிய கலால் கொள்கையின் கீழ், டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, இதில் 20 மண்டலங்களில் உரிமங்கள் ஒதுக்கீடு செயல்முறையில் உள்ளது மற்றும் […]

You May Like